
டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதை அடுத்து அனைத்து பகுதிகளிலு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இது ஒருபுறம் வேகமெடுத்துள்ள நிலையில் மற்றோரு புறம் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதில், தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், முழு லாக்டவுன் கிடையாது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் உள்பட அங்குள்ள அனைத்து பிரிவு காவல் நிலையங்களிலும் ஏராளமான காவல் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி, கூடுதல் ஆணையர் உட்பட 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையின் போது அதாவது கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பை காட்டிலும் தற்போது தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.