நைஜீரியாவில் இருந்து வந்த சிறுத்தையில் லம்பி வைரஸ் பரவுகிறது.. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கருத்து

By Raghupati RFirst Published Oct 3, 2022, 7:54 PM IST
Highlights

நைஜீரியாவில் நீண்ட காலமாக கட்டி தோல் நோய் வைரஸ் இருந்ததாகவும், சிறுத்தைகள் அங்கிருந்து இந்தியாவிற்கும் வந்ததாகவும் படோலே குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் மீண்டும் தங்கவைக்கப் பட்டன. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தனது 72 வது பிறந்தநாளைக் குறிக்கும் ஒரு நாளில் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வில் தேசிய பூங்காவில் எட்டு சிறுத்தைகளை விடுவித்தார்.

இதையும் படிங்க..உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !

‘நைஜீரியாவில் நீண்ட காலமாக லம்பி வைரஸ் நிலவி வருகிறது, சிறுத்தைகளும் அங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளின் இழப்புக்காக மத்திய அரசு வேண்டுமென்றே இதைச் செய்துள்ளது’ என்று கடுமையாக பாஜக மீது குற்றஞ்சாட்டி உள்ளது.

| "This lumpy virus has been prevailing in Nigeria for a long time and the Cheetahs have also been brought from there. Central government has deliberately done this for the losses of farmers," says Maharashtra Congress chief Nana Patole pic.twitter.com/X3DrkFyMPw

— ANI (@ANI)

லம்பி வைரஸ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாடுகளை பாதித்துள்ளது. ராஜஸ்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வைரஸின் பரவலைக் குறைக்க அரசாங்கம் உள்நாட்டு தடுப்பூசியைத் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

click me!