“பொது மக்களுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன்..!!!” - ஆந்திர முதலமைச்சர் அதிரடி..!!

Asianet News Tamil  
Published : Nov 27, 2016, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
“பொது மக்களுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன்..!!!” - ஆந்திர முதலமைச்சர் அதிரடி..!!

சுருக்கம்

புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின்  அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாடு காராணமாக பொதுமக்கள், சிறு குறு வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமும், இணையம் வழியாக பண பரிவர்த்தனையும் செய்து தங்களுக்கு தேவையுள்ள பொருட்களை வாங்கும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, படிக்காத பாமர மக்கள் இணையவழி பணப்பரிவர்த்தனைகளை எப்படி பயன்படுத்துவது என தெரியவில்லை என்றும், இதனை பயன்படுத்த தங்களிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநி‌லத்தில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்ஃபோன் தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தமிழ்நாடு உட்பட 5 மாநில கணிப்பு முடிவுகள் - எங்கு? எப்போது பார்க்கலாம்? லைவ் அப்டேட்ஸ்
இனி பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலை இல்லை.! அரபு நாடுகளுக்கு ஆப்பு வைத்த இந்தியா.! பெட்ரோலுக்கு புது மாற்று வந்தாச்சு.!