
நாட்டின் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாகத் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை 2026ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து மத்திய அரசு கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தகவல் அளித்தது. அதன்படி, கணக்கெடுப்புப் பணி பின்வரும் இரண்டு கட்டங்களாக நடைபெறும்:
முதல் கட்டம் (வீடுகள் கணக்கெடுப்பு): 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இரண்டாம் கட்டம் (மக்கள்தொகை கணக்கெடுப்பு): 2027ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல், முக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும்.
இந்த நிலையில், களப்பணியாளர்கள் நியமனம் குறித்து இந்தியப் பதிவாளர் ஜெனரல் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்: