சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் ஆட்டி படைத்த கொரோனா எனும் பெருந்தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது.பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பருவ தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. அதன் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி முதல் பருவத்தேர்வு தொடங்கும் தேதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் 1ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவகால தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு குறித்து முழு விவரங்களை இணையதளம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.