மத்திய பிரதேசத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத்தில் தியான் சந்திரா டிராபிக்கான ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில், பங்கேற்க இடார்சி என்ற பகுதியில் இருந்து ஒரு காரில் 7 ஹாக்கி வீரர்கள் சென்றுக்கொண்டிருந்தனர். ரைசல்பூர் என்ற இடத்துக்கு அருகே கார் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், அருகில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.