தாக்கரேவை தட்டித்தூக்கிய ஷிண்டே.. மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி மெகா வெற்றி!

Published : Jan 16, 2026, 02:50 PM IST
bmc election exit poll thackeray rule end bjp shiv sena mahayuti

சுருக்கம்

மும்பை மாநகராட்சி (BMC) தேர்தலில், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி பெரும்பான்மையைக் கடந்து வரலாற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் சரிவாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சி (BMC) தேர்தலில், பாரதிய ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி (மகாயுதி) பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

முன்னிலை நிலவரம்

மும்பை மாநகராட்சியின் மொத்தமுள்ள 227 வார்டுகளில், ஆட்சியைப் பிடிக்க 114 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க - ஷிண்டே கூட்டணி 119-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது.

அதேநேரம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கைகோர்த்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) மற்றும் ராஜ் தாக்கரேவின் மராட்டிய நவநிர்மாண் சேனை (MNS) கூட்டணி வெறும் 67 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 12 இடங்களை எட்டியுள்ளது.

நிஜமான வாரிசு யார்?

2022-ல் சிவசேனா பிளவுபட்ட பிறகு நடைபெறும் முதல் மாநகராட்சித் தேர்தல் இது என்பதால், பால்தாக்கரேவின் உண்மையான அரசியல் வாரிசு யார் என்பதை நிரூபிக்கும் கௌரவப் போராட்டமாக இது பார்க்கப்பட்டது. 1997 முதல் மும்பை மாநகராட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உத்தவ் தாக்கரே அணிக்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் சரிவாகக் கருதப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அரசியல் களம் சூடுபிடித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மக்களை ஏமாற்றுவதாகவும், இது ஒரு "ஓட்டுத் திருட்டு" என்றும் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனவல்லா, தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் எதிர்க்கட்சிகள் பிதற்றுவதாக விமர்சித்துள்ளார்.

மினி சட்டமன்றத் தேர்தல்

இந்த வெற்றி மகாராட்டிர மாநிலத்தின் வரவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கு ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வெளியாகியுள்ள முடிவுகள் மகாயுதி கூட்டணியின் பலத்தை நிரூபித்துள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!