நமது SC, ST, OBC மக்களின் உரிமைகள்.. அதை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்கிரஸ் நோக்கம் - JP நட்டா சாடல்!

By Ansgar RFirst Published Apr 26, 2024, 10:11 AM IST
Highlights

BJP About Manmohan Singh : 2009ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடியோ ஒன்றை பாஜக பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை இருப்பதாக முன்னாள் பிரதமர் பேசியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரசை பாஜக தாக்கி வருகிறது. ஜே.பி நட்டாவும் காங்கிரஸைத் தாக்கி ட்வீட் செய்துள்ளார். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதற்கிடையில், 2009 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய வீடியோவை பாஜக பகிர்ந்துள்ளது. 

இந்த வீடியோவில் அவர் நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று பேசுகிறார். அதை மேற்கோள் காட்டி பேசிய பாஜக, காங்கிரஸ் குறித்த எங்களின் கூற்றுகள் தவறில்லை என்று அந்த வீடியோவிற்கு பதில் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளது. இப்போது பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் காங்கிரஸை குறிவைத்து, காங்கிரஸும் இந்தியக் கூட்டணியும் நமது எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினரின் உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புகின்றன என்று சாடியுள்ளார். 

ELECTION : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..? முக்கிய வேட்பாளர்கள் யார்.? எத்தனை தொகுதிக்கு தேர்தல்.?

பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 2009ல் நடந்த ஒரு சம்பவத்தின் பழைய வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா தேர்தலுக்கு முன் கூறியதை கோடிட்டு காட்டுகின்றது. நாட்டின் வளங்கள் என்று வரும்போதெல்லாம் சிறுபான்மையினர், குறிப்பாக ஏழை முஸ்லிம்களின் உரிமைகள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். 

நாட்டின் வளங்களில் ஏழை முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் வளங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கே முதல் உரிமை இருக்க வேண்டும் என்ற தனது முந்தைய கூற்றில் தான் நிற்பதாகவும் அந்த வீடியோவில் மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

ஏப்ரல் 2009ல் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீடியோவைப் பகிர்ந்து, பாஜக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது மன்மோகன் சிங்கின், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிப்பது காங்கிரஸ் கட்சியின் தெளிவான கொள்கை என்ற எங்கள் கூற்றை இது ஆதரிக்கிறது என்று கூறியுள்ளது.…

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

வீடியோவில் உள்ள முன்னாள் பிரதமரின் கூற்றுகள் குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இந்த தெளிவான கூற்று, அவரது முந்தைய அறிக்கை குறித்து காங்கிரஸ் அளித்த வதந்திகள் மற்றும் விளக்கங்களை மறுப்பதாக கூறப்படுகிறது. எங்களது கூற்றுகள் தவறல்ல, முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் தெளிவான கொள்கை. இடஒதுக்கீடு முதல் நாட்டின் வளங்கள் வரை அனைத்திலும் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை அளிக்கும் காங்கிரஸின் மனநிலைக்கு இந்த வீடியோ சான்றாகும் என்று தெரிவித்துள்ளது.

நமது எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ், இந்திய கூட்டணி விரும்புகிறது - ஜகத் பிரகாஷ் நட்டா சாடல். https://t.co/VlP6YyqsOU

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி நாட்டில் சமாதான அரசியலை ஊக்குவிக்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினரின் உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி விரும்புகிறது. இதுதான் இவர்களின் மறைமுக செயல்திட்டம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால் கூட அது முஸ்லீம் சமாதானத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும். அவர்களுக்கு வளர்ச்சியில் அக்கறை இல்லை. இவர்களுக்கு ஓட்டு வங்கி அரசியல் செய்ய மட்டுமே தெரியும். அதேசமயம் நாட்டின் வளங்களில் ஏழைகளுக்கு முதல் உரிமை உண்டு என்று பிரதமர் மோடி கூறுகிறார் என்றார் நட்டா.

நிர்மலா சீதாராமன், டிராவிட், மம்முட்டி, சுரேஷ் கோபி, வாக்குப்பதிவு.. விறுவிறுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் களம்

click me!