நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப லஞ்சம்.. மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு - பாஜா எம்.பி நிஷிகாந்த் காட்டம்!

Ansgar R |  
Published : Oct 15, 2023, 07:38 PM IST
நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப லஞ்சம்.. மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு - பாஜா எம்.பி நிஷிகாந்த் காட்டம்!

சுருக்கம்

அதானி குழுமம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து பார்லிமென்டில் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் "கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாவும்" ஆகையால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜகவின் நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார்.

திரு துபே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமதி மொய்த்ரா, நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல், சபை அவமதிப்பு மற்றும் கிரிமினல் சதி ஆகியவற்றை செய்துள்ளதாக அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக "எந்த வகையான விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்று திருமதி. மொய்த்ரா கூறியுள்ளார்.

மேலும் பாஜக எம்.பியின் குற்றச்சாட்டை ஹிரானந்தானி குழுவும் நிராகரித்துள்ளது. "நாங்கள் எப்போதும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோமே தவிர, அரசியலில் ஈடுபடவில்லை. எங்கள் குழு எப்போதும் தேசத்தின் நலனுக்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது, அதை நாங்கள் தொடர்வோம்" என்று ஹிராநந்தனி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்தியாவில் வாழ வேண்டுமானால் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்ல வேண்டும்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஹிரானந்தானி குழுமம், அதானி குழுமத்துடனான ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமதி மொய்த்ராவின் கேள்விகள் முன்னாள் வணிக நலன்களை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக திரு. துபே, திரு. பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திரிணாமுல் எம்.பி.க்கு ஹிரானந்தனி 2 கோடியும், விலை உயர்ந்த ஐ-போன் போன்ற பரிசுகளையும் கொடுத்ததாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்காக 75 லட்சம் பணத்தையும் கொடுத்ததாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 மற்றும் 2023க்கு இடையில், எம்பி கேட்ட 61 கேள்விகளில், ஐம்பது தர்ஷன் ஹிரானந்தனியின் உத்தரவின் பேரில் இருந்ததாக திரு. துபே குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த தொழிலதிபருக்கு தனது மக்களவைக் கணக்கிற்கான அணுகலை வழங்கியுள்ளார் என்றும், அங்கு அவரது உத்தரவின் பேரில் திரு ஹிரானந்தானி அல்லது திருமதி மொய்த்ரா நேரடியாக கேள்விகளை கேட்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ