Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்

By Raghupati RFirst Published Jan 21, 2023, 3:07 PM IST
Highlights

எனக்கு எதிராக பிரதமர் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்தாலும் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா.

கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. கர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.

மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.  ஆட்சியை தக்க பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், ஜனதாதளம் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் கோதாவில் குதித்துள்ளன.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

இதனால் வரும் தேர்தலில் கர்நாடகாவில் நான்கு முனை போட்டி நிலவ அதிக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் போட்டியிட்டு சித்தராமையா வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது தொகுதி மாறி கோலாரில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

வயது மற்றும் தூரத்தை காரணம் காட்டி தனது தொகுதியை வட கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமியில் இருந்து கோலாருக்கு மாற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் வரட்டும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்து, கோலாரில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.

இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 4 மாதங்கள் உள்ள சட்டமன்றத் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததில் இருந்தே எதிர்மறையான பிரச்சாரம் தொடங்கியுள்ளது என்று கூறினார். சித்தராமையா 2018 சட்டமன்றத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார்.

அவர் சாமுண்டேஸ்வரி தொகுதியில் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேடி(எஸ்) வேட்பாளர் ஜி டி தேவகவுடாவை எதிர்த்து தோல்வியடைந்தாலும், பாதாமி பாஜகவின் பி ஸ்ரீராமுலுவுக்கு எதிராக சுமார் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சித்தராமையா, பாதாமி மக்கள் என்னை விரும்புகிறார்கள். ஹெலிகாப்டருக்கு நிதியுதவி செய்ய கூட தயாராக உள்ளனர். ஆனால் வயது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தூரம் காரணமாக, கோலாரில் இருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க..2000 ஆண்டு பழமை! மழைக்காடுகளுக்கு உள்ளே புதைந்து கிடந்த மாயன் நகரம் - எங்கு இருக்கு தெரியுமா?

click me!