
ஹொஸ்கோட் தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சரத் பச்சேகவுடா வெற்றி பெற்றதையடுத்து, டி.ஷெட்டிஹள்ளியில் பாஜக பிரமுகர் கிருஷ்ணப்பா வீட்டின் முன் பட்டாசு வெடித்து ரகளையை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியினர், பின்னர் அவரைத் தாக்கிக் கொன்றனர்.
காங்கிரஸ் வேட்பாளர் சரத் பச்சகவுடா வெற்றி பெற்றதையடுத்து, சனிக்கிழமை மாலை கிருஷ்ணப்பா (55) வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை கொளுத்தி வீசினர். அப்போது, ஆத்திரமடைந்த அவர், கிருஷ்ணப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கினார். இதில் கிருஷ்ணப்பாவின் நெஞ்சிலும் தோளிலும் கோடரியால் தாக்கியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது மகன் பாபு மற்றும் அவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆதி, கணேஷ், ஹரிஷ், சன்னகேசவா ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாலுகா பாஜக தலைவர் கே.சதீஷ் மற்றும் ஜி.பி. முன்னாள் உறுப்பினர் சி.நாகராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் நந்தகுடி கிராமத்தில் உள்ள காவல் நிலையம் முன்பு சடலத்தை வைத்து போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து பேசியிருக்கும் விதான் பரிஷத் உறுப்பினர் எம்.டி.பி.நாகராஜ், தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட சில மணி நேரத்தில் மாநிலத்தின் அமைதியை குலைக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் இறங்குவது சரியல்ல. தொண்டர்கள் தான் எங்கள் கட்சியின் முதுகெலும்பு. அவர்களை தொட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே டி.ஷெட்டிஹள்ளியில் தவிர, ஷிவ்னாபூர், கொடிஹள்ளி, கமரசனஹள்ளி, குருபரஹள்ளி ஆகிய கிராமங்களில் பாஜகவினர் வீடுகள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்று, சனிக்கிழமை முடிவுகள் வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளைப் பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வென்றுள்ளனர். கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா மற்றும் சர்வோதய கர்நாடகா பக்ஷா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் பாஜகவைவிட அதிக அளவு வாக்குகளைப் பெற்று முன்னேறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி 42.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைவிட 4.86 சதவீதம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.