‘பத்மாவதி’ எதிர்ப்பு கோஷ்டியில் இணைந்த நிதிஷ் குமார் - தீபிகா நடனக் காட்சியை தவிர்க்க வேண்டுமாம்

 
Published : Nov 28, 2017, 09:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
‘பத்மாவதி’ எதிர்ப்பு கோஷ்டியில் இணைந்த நிதிஷ் குமார் - தீபிகா நடனக் காட்சியை தவிர்க்க வேண்டுமாம்

சுருக்கம்

Bihar Chief Minister Nitish Kumar also joined the protest against the Padmavathi screening

`பத்மாவதி' திரைப்படி எதிர்ப்பு கோஷ்டியில் பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமாரும் இணைந்து இருக்கிறார். இயக்குனர் உரிய விளக்கம் அளிக்கும் வரையில் பீகாரில் அந்த படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்றும், படத்தில் ராணி (தீபிகா படுகோனே) நடனம் ஆடும் காட்சியை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

நிதிஷ்குமார்

`பத்மாவதி' திரைப்படத்திற்க எதிராக பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் (குறிப்பாக பா.ஜனதா கட்சியினர்) எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தலைவரும், பீகார் முதல் அமைச்சருமான நிதிஷ்குமாரும் `பத்மாவதி' எதிர்ப்பு கோஷ்டியில் இணைந்து இருக்கிறார்.

அனுமதிக்க முடியாது

`பத்மாவதி' படம் குறித்து அவர் கூறியதாவது-

‘‘சர்ச்சைக்குரிய `பத்மாவதி' படம் குறித்து அதன் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும் வரை அந்தப் படத்தை பீகார் மாநிலத்தில் திரையிட அனுமதிக்க முடியாது.

`பத்மாவதி' படம் குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்படுவதால் படத்தின இயக்குனர் தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் படத்தில் ரணி `பத்மாவதி' (தீபிகா படுகோனே) நடனம் ஆடும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு