
ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்ட விஷயத்தில், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்பதாக பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதுகுறித்து திடீர் திருப்பமாக அவர் வெளியிட்டுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் பழைய மாற்றிக்கொள்ளவும், பணம் எடுக்கவும், வங்கிகளையும், ஏ.டி.எம். மையங்களையும் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம், அமளி துமளியால் முடங்கி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு மாற்றப்பட்ட விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்பதாக கூறி, தனது டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், “ரூபாய் நோட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவில் உங்கள் நேரடி கருத்தை அறிய விரும்புகிறேன். ‘என்எம்ஆப்’ கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளுங்கள்” என கூறி உள்ளார்.
பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் பொருட்டு கேட்கப்பட்டுள்ள கேள்விகள்:-
இந்தியாவில் கருப்பு பணம் இருக்கிறது என கருதுகிறீர்களா?
ஊழல், கருப்பு பணம் என்னும் தீமைகளை எதிர்த்து போரிட்டு, அழிக்க வேண்டிய அவசியம் உள்ளது என கருதுகிறீர்களா?
பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகளை தடை செய்து அரசு எடுத்த நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கருப்பு பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஊழலுக்கு எதிராக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
சிறப்பா? மிக நன்றா? நன்றா? பரவாய் இல்லையா? பிரயோஜனம் இல்லையா?
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை தரமிடுங்கள்.
ஏ. மிகப்பெரியது. பி. நன்று சி. எந்த மாற்றமும் வந்துவிடாது.
கருப்பு பணத்தை, ஊழலை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை உதவுமா?
ஏ. உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும். பி. படிப்படியாக நீண்ட காலப்போக்கில் மாற்றம் வரும். சி. மிகக் குறைவான மாற்றம்தான் டி. தெரியாது.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பால் ரியல் எஸ்டேட், உயர்கல்வி, சுகாதார வசதிகள் சாமானிய மக்களை சென்றடையுமா?
ஏ. முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். பி. கொஞ்சம் ஒப்புக்கொள்கிறேன். சி. எதுவும் கூற இயலாது.
ஊழல், கருப்பு பணம், பயங்கரவாதம், கள்ள நோட்டுகள் ஆகியவற்றுக்கு எதிரான எங்களது நடவடிக்கையால் ஏற்படுகிற அவதிகளை மனதில் கொள்கிறீர்களா?
ஏ. இல்லவே இல்லை. பி. சற்று சி. ஆமாம்.
நீங்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏதேனும் யோசனைகள், கருத்துகள், உள்ளார்ந்த பார்வையை கொண்டிருக்கிறீர்களா?
இவ்வாறு பிரதமர் மோடி, பொதுமக்கள் பதில் அளிக்கத்தக்கதாக கேள்விகளை வெளியிட்டுள்ளார்.