வல்லுனர்களுக்கு செம்மொழி தமிழாய்வு சார்பில் விருது - குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவம்...

 
Published : May 09, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
வல்லுனர்களுக்கு செம்மொழி தமிழாய்வு சார்பில் விருது - குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவம்...

சுருக்கம்

Award for Classical Tamil Translation - Presidential Honor

வல்லுனர்களுக்கு செம்மொழி தமிழாய்வு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. இதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

2013 -14, 2014 - 15, 2015 - 16 ஆம் ஆண்டுகளுக்கான செம்மொழி தமிழாய்வு சார்பில் வல்லுனர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

தொல்காப்பியர், இளம் அறிஞர் விருதுகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்குகிறது.

2013 - 14 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

பாலசுப்ரமணியன், செழியன், ராஜலக்ஷ்மி, மகாலட்சுமி, சாலாவாணிஸ்ரீ ஆகியோருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது.

2014 -15 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது முனைவர் தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

அ.சதீஷ், முத்துசெல்வன், திருஞானசம்பந்தம், வசந்தகுமாரி, கோ.சதீஷ் ஆகியோருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது.

2015 -16 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது முனைவர் கலைக்கொவனுக்கு வழங்கப்பட்டது.

வனிதா, பிரகாஷ், பிரேம்குமார், பாலாஜி, முனீஸ்மூர்த்தி ஆகியோருக்கு இளம் அறிஞர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்