நேபாளை தாக்கும் தொடர் நிலநடுக்கங்கள்.. இதனால் என்ன நடக்கும்? விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

Ansgar R |  
Published : Nov 07, 2023, 01:21 PM IST
நேபாளை தாக்கும் தொடர் நிலநடுக்கங்கள்.. இதனால் என்ன நடக்கும்? விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

Nepal Earthquake : அண்மையில் நேபாள் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான கடும் நில நடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டது. இந்த கொடூர நில நடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேபாளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அவை இதற்கு முன்பு ஏற்பட்டதை விட அதிக ரிக்ட்டர் அளவில் பதிவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்தியை இப்பொழுது பார்க்கலாம்.

5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து நேபாளம் தொடர்ந்து மீண்டு வருகின்றது, ஆனால் அந்நாட்டில் இதுபோன்ற மேலும் பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நேபாளத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம்.. அடுத்த ஆட்சி யாருடையது? முடிவு செய்யும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது!

நேபாளில் 9000 பேரைக் கொன்ற 2015ம் ஆண்டு பேரழிவுகரமான பூகம்பத்திற்குப் பிறகு, கடந்த நவம்பர் 5 தேதி பெரும் நிலநடுக்கம் நேபாளத்தைத் தாக்கியது. ஊடக அறிக்கைகளின்படி, ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் அப்பகுதியில் உள்ள அனைத்து இருகங்களையும் வெளியிடவில்லை என்றும், ஆகையால் நேபாளம் விரைவில் மற்றொரு நிலநடுக்கத்திற்கு உள்ளாகலாம் என்றும், அது 8.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்ட்டர் அளவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

நேபாள நிலநடுக்க தொழில்நுட்பத்தின் தேசிய சங்கத்தின் நில அதிர்வு நிபுணரும், நிர்வாக இயக்குநருமான மருத்துவர் அமோத் தீட்சித் கருத்துப்படி, நேபாளத்தின் மத்திய பெல்ட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அது ஆற்றல் அதிக அளவில் வெளியாகும் இடம் என்றும் தெரிவித்தார்.

இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதிக் கொண்டதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தீட்சித் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம், நேபாளத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பில்களில் தாக்கப்பட்ட மத்திய பெல்ட்டை பாதிக்கவில்லை என்று தீக்ஷித் கூறினார். எனவே அதன் ஆற்றலின் ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டது. மற்றொரு 8.0 ரிக்டர் அளவு அல்லது அதற்கும் அதிகமான நிலநடுக்கத்தை உருவாக்க போதுமான சக்தி எஞ்சியிருப்பதாக அவர் மதிப்பிடப்பட்டுள்ளார். மேலும் இது விரைவாகவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்றார் அவர்.

என்ன செய்வீர்களோ தெரியாது.. புற்களை எரிப்பதை நிறுத்துங்கள் - பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

ஜனவரி 2023 முதல் நேபாளம் இதுவரை 70 நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. மூன்று நாட்களில் நேபாளம் மற்றொரு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது, அதன் விளைவு புது தில்லி வரை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!
120 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்! ரூ.2,500 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!