Tomato : தக்காளியை விற்று 1 மாதத்தில் 3 கோடி சம்பாதித்த விவசாயி.. சோசியல் மீடியாவில் குவியும் லைக்ஸ் !!

By Raghupati RFirst Published Jul 28, 2023, 12:46 PM IST
Highlights

ஆந்திரப் பிரதேச விவசாயி தக்காளியை விற்று 1 மாதத்தில் 3 கோடி சம்பாதித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து, கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை ஏற்றம் கண்டுள்ளது. சில விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தாலும், சிலர் தக்காளியை விற்று பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். அதிகரித்து வரும் தக்காளி விலை ஆந்திராவில் ஒரு விவசாயிக்கு மிகவும் லாபகரமானது என்பதை நிரூபித்துள்ளது.

பி.சந்திரமௌலி, அவரது தம்பி முரளி மற்றும் அவர்களது தாய் ராஜம்மா ஆகியோர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கரகமண்டா மற்றும் சுவ்வரபு வாரிப்பள்ளி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள 32 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். மேலும் சந்திரமௌலியின் வெற்றி தான் வைரல் செய்தியாகும்.

சந்திரமௌலி, பல விவசாயிகளைப் போலவே, கஷ்டங்களையும் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொண்டார். அவருடைய முந்தைய அறுவடைகளில் சில ஏமாற்றமான முடிவுகளைத் தந்தன. இருப்பினும், அவர் விடாமுயற்சியுடன், தனது விளைச்சலை மேம்படுத்த புதுமையான விவசாய முறைகளையும் சந்தைப்படுத்தல் உத்திகளையும் தொடர்ந்து முயன்று வந்துள்ளார்.

Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!

ஏப்ரலில், சந்திரமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் தக்காளி சாகுபடி செய்ய முடிவு செய்தனர், கோடைக்கு பிந்தைய விளைச்சல் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் 22 ஏக்கரில் சாஹு வகை தக்காளி செடிகளை நட்டு, பயிர் வளர்ச்சியை மேம்படுத்த நவீன விவசாய முறைகளை பின்பற்றினர். ஜூன் மாத இறுதியில், விளைச்சல் விற்பனைக்கு தயாராக இருந்தது.

தேவையும் விலையும் சாதகமாக இருந்த தங்கள் விளைபொருட்களை விற்க, கர்நாடகாவில் அருகிலுள்ள கோலார் சந்தையைத் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு 15 கிலோ தக்காளி பெட்டியும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. இதுவரை சுமார் 40,000 பெட்டிகள் விற்பனையாகியுள்ள நிலையில், சந்திரமௌலி குடும்பத்துக்கு ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதேபோல், தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் பி.மஹிபால் ரெட்டி என்ற விவசாயி, கடந்த 15 நாட்களாக தக்காளி விற்று ரூ.2 கோடி சம்பாதித்துள்ளார். 25 முதல் 28 கிலோ எடையுள்ள விளைச்சலை விற்றதால், ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை விலை கிடைத்தது. ஏறக்குறைய 7,000 பெட்டிகள் விற்கப்பட்ட நிலையில், அவரது சம்பாத்தியம் ரூ.2 கோடியை எட்டியது.

Hero Bikes : ரூ.57 ஆயிரத்துக்கு கிடைக்கும் பைக்குகள்.. வேற மாறி ஆஃபர் - முழு விபரம் இதோ !!

click me!