தண்ணீர் கேட்ட இஸ்லாமியருக்கு பழ விருந்து வைத்த இந்து! மனம் நெகிழ்ந்து பதிவிட்ட அனஸ் தன்வீர்!

By Asianet TamilFirst Published Mar 29, 2023, 4:23 PM IST
Highlights

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் அனஸ் தன்வீர், தனது ரம்ஜான் நோன்பு முறிக்கும் நேரத்தில், என்சிஆர் பிராந்தியத்தின் டெல்லி பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். வாகன ஓட்டுனரான ஒரு இந்துவிடம் தண்ணீர் கேட்க, அவரோ நோன்பு இருப்பதை புரிந்துகொண்டு பழ விருந்து அளித்துள்ளார்.
 

அனஸ் தன்வீர் தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு ஏராளமான லைக்குகளும், கமெண்டடுகளும் குவிந்து வருகின்றன.

அனஸ் தன்வீர், தன் டுவிட்டரில் பதிவிட்டவை...

"இப்தார் நோன்பு முடிக்கும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். நவராத்திரி உண்ணாவிரதம் இருந்த உபேர் ஓட்டுநர் யத்தின் குமாரிடம் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டேன். நான் நோன்பு இருப்பதை அவர் உடனடியாகப் புரிந்துகொண்டார். எனக்கு தண்ணீர் கொடுத்தது மட்டுமின்றி அவர் தனது மதிய உணவிற்காக வைத்திருந்த நிறைய பழங்களையும் எண்ணோடு பகிர்ந்து கொண்டார். என பதிவிட்டார்.

 

Was stuck in traffic around iftar time. I asked 's driving partner Yatin Kumar who was fasting for Navratra if he had water. He immediately understood that I was fasting and not only he gave me water he shared his box full of fruits which he had kept for his fast.

— Anas Tanwir (@Vakeel_Sb)


இதைப் பார்த்த நெட்டிசன்கள், அவரது இடுகைக்கு "நாங்கள் எப்போதுமே அப்படித்தான் இருக்கிறோம்" என்ற வகையில் கருத்துக்களுடன் பதிலளித்தனர்.

அதே டூவீட்டில், அனஸ் தனது முந்தைய ஹோட்டலில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தையும் இதேபோன்ற அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார். ரம்ஜான் போது அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, மாலையில் நோன்பு துறக்க வேண்டியிருந்தபோது, ஹோட்டலில் பஃபே ஏற்பாடு செய்திருந்தபோதும் நோன்பு நோற்ற முஸ்லீம்களுக்கு ஏற்ற வையில் தனித் தட்டு வழங்கப்பட்டதை குறிப்பிட்டிருந்தார்.

அனஸ் தன்வீர் டூவிட்-ல் எழுதுகிறார்...

ஒருமுறை நான் இப்தார் நேரத்தில் என் குழுவுடன் இரவு உணவிற்குச் சென்றேன், நான் உண்ணாவிரதம் இருப்பதை ஹோட்டல் ஊழியர்கள் அறிந்ததும், நான் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு சிறிது நேரத்தில் எனக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு இப்தார் தட்டை கொண்டு வந்தனர்.
அனஸ் மேலும் எழுதினார்:
 

Was stuck in traffic around iftar time. I asked 's driving partner Yatin Kumar who was fasting for Navratra if he had water. He immediately understood that I was fasting and not only he gave me water he shared his box full of fruits which he had kept for his fast.

— Anas Tanwir (@Vakeel_Sb)

 


அவரது இந்தப் பதிவை சுமார் 12 மணி நேரத்தில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர், மேலும் இது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு இணையவாசிகளிடமிருந்தும் பல்வேறு சுவாரஸ்யமான கருத்துக்களைப் பெற்றுள்ளது:

சக வழக்கறிஞர் விஷால் ராஜ் செஹிஜ்பால் செய்த டுவீட்டில்,

 

 

 

Was stuck in traffic around iftar time. I asked 's driving partner Yatin Kumar who was fasting for Navratra if he had water. He immediately understood that I was fasting and not only he gave me water he shared his box full of fruits which he had kept for his fast.

— Anas Tanwir (@Vakeel_Sb)



மெஹ்னாஜ் அம்ஜத் எழுதினார்:

“அல்லாஹ் இந்த நாட்களை, இந்த மனநிலையையும் இந்த அணுகுமுறையையும் நமது இந்தியாவில் மீண்டும் கொண்டு வரட்டும், எனது அன்பான தாய்நாடு உட்பட அனைவருக்கும் ஆமீன் பிரார்த்தனைகள்.


லத்திகா பதிலளித்துள்ள டூவிட்டில், :

"இது சாதாரணமாக இருந்தது. இப்போது நாம் இந்தக் கதைகளைப் பகிர்ந்து கொள்வது வருத்தமளிக்கிறது. நாம் வாழும் சோகமான காலங்களை சொல்கிறது. மும்பையில் உள்ள சால்களில் பெண்கள் இரு மதத்தினரும் விரதம் இருக்கும் இளங்கலைகளைக் கவனித்துக் கொண்டனர்.

ஸ்வப்னீல் பாரதியாவின் பதில்:

“உண்மை. இதற்கு முன் ட்வீட் செய்யத் தகுந்த சம்பவமாக இது இருந்திருக்காது. இன்று உண்மையில் இவை சொல்லப்பட வேண்டியவை, இன்றைய 20 வயது இளைஞர்கள் கருத்து வேறுபாடுகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக ஒதுக்கப்படு நான் காண்கிறேன்.

கீரா எழுதிய பதிவில்

“முன்பு சாதாரணமாக இருந்த ஒன்றை இன்று சொல்லி கொண்டாட வேண்டும். மனிதாபிமானம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிக் கொள்வது நேற்றை விட இன்று கடினமாகத் தெரிகிறது, ஆனால் நாம் வெற்றி பெறுவோம்.

வெற்றிக் கதைகள்! - மருத்துவராகிய பின்னரும் விவசாயத்தை மறக்காத மருத்துவர்!

அபிஷேக் திவேதி கூறியதாவது:

"99.9999% "இந்தியன்" உங்களுக்காக இதைச் செய்ய விரும்புகிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கும் & நீங்கள் விரும்பாத ஒன்றை நாங்கள் வாதிடுவோம் அல்லது பேசுவோம் ஆனால் நாங்கள் ஒரு "குடும்பம்" & நாங்கள் உங்கள் அனைவரையும் நேசிக்கிறோம்."

சசிகுமார் கண்ணன் கூறியதாவது:

“இது பல இடங்களில் சகஜம். சமூக ஊடகங்கள் இப்போது மக்களின் யதார்த்த உணர்விற்கு ஊட்டமளிக்கும் உச்சநிலையை முன்னிலைப்படுத்துகிறது. நாம் ஆன்லைன் உலகத்தை விட நிஜ வாழ்க்கையில் வாழ வேண்டும் என்றார்.

அனஸ் தன்வீர், இந்திய சிவில் லிபர்டீஸ் யூனியனின் நிறுவனர் ஆவார், இது ஒரு வழக்கறிஞர் குழுவாகும், மேலும் ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் உணவளிக்கும் உலகளாவிய பிரச்சாரமான Iftar4allஉடன் தொடர்புடையவர் என்பது குறிப்படித்தக்கது.

click me!