நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Rsiva kumar   | ANI
Published : Apr 04, 2025, 09:30 PM IST
நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

சுருக்கம்

Earthquake in Nepal : நேபாளத்தில் இன்று இரவு 7.52 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதாவது, வட இந்தியாவின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Earthquake in Nepal : நேபாள் நாட்டில் இன்று இரவு 7:52 மணிக்கு (IST) 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. NCS-ன் படி, நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அட்சரேகை 28.83 N மற்றும் தீர்க்கரேகை 82.06 E இல் பதிவானதாக NCS தெரிவித்துள்ளது.

NCS தனது X பக்கத்தில், "M: 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், நேரம்: 04/04/2025 19:52:53 IST, அட்சரேகை: 28.83 N, தீர்க்கரேகை: 82.06 E, ஆழம்: 20 கிமீ, இடம்: நேபாளம்."

நேபாள் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏற்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 28ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதில், கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மியான்மர் நிலநடுக்கத்திற்கு பிறகு இப்போது நேபாளில் நில நடுக்க ஏற்பட்டிருக்கிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்