இந்தியாவில் 63 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி.. மத்திய அரசு தகவல்

By Ramya sFirst Published Dec 25, 2023, 5:13 PM IST
Highlights

இந்தியாவில் 63 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் JN.1 மாறுபாடு காரணமாக தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 63 பேருக்கு JN.1 மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவாவில் 34 பேருக்கும், மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் இருந்து 4 பேருக்கும், தெலுங்கானாவில் இருந்து 2 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. 

இந்தியாவில் உள்ள விஞ்ஞான சமூகம் புதிய கோவிட் துணை மாறுபாட்டை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக NITI ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் தெரிவித்தார். மேலும், மாநிலங்கள் சோதனையை அதிகரிக்கவும், தங்கள் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டு அடிப்படையிலான சிகிச்சையைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் லேசான பாதிப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்களில் எந்த அதிகரிப்பும் இல்லை மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே கடந்த வாரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷ் பந்த் கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு முக்கியமான கோவிட்-19 கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை உத்திகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், ஆபத்தை குறைக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பகிர்ந்துள்ள திருத்தப்பட்ட கோவிட் கண்காணிப்பு உத்திக்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை திறம்பட கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதற்காக அனைத்து சுகாதார வசதிகளிலிருந்தும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் கடுமையான சுவாச நோய் (SARI) ஆகியவற்றை மாவட்ட வாரியாக கண்காணித்து அறிக்கை செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

Covid JN.1 New Variant: ஏன் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கோவிட் 19 உருமாறி வருகிறது? JN.1 பரவ காரணம் என்ன?

இந்தியாவில் ஒரே நாளில் 628 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4,054 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,334 ஆக பதிவாகியுள்ளது, 24 மணி நேரத்தில் கேரளாவில் இருந்து ஒரு புதிய மரணம் பதிவாகியுள்ளது, 

கோவிட் இன் JN.1 (BA.2.86.1.1) துணை மாறுபாடு ஆகஸ்ட் மாதம் லக்சம்பர்க்கில் தோன்றியது. இது SARS COV2 இன் BA.2.86 பரம்பரையின் (பிரோலா) வழித்தோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!