ஆட்சியை பிடிக்கப் போவது யார்? உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டப் பேரவை வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்..

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 06:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டப் பேரவை வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்..

சுருக்கம்

5 states votes counting

ஆட்சியை பிடிக்கப் போவது யார்? உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டப் பேரவை வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்..

உத்தரபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள்  பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தல் நடைபெற்ற  5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரியவரும்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு கடந்த  மாதம் 4–ந் தேதி தொடங்கி, மார்ச் 8–ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.

வரும் ஜூலை மாதம் குடியரசுத் தலைவர்  தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு  எண்ணிக்கை தொடங்குகிறது. உத்தரபிரதேசத்தில் 78 மையங்களிலும், உத்தரகாண்டில் 15 மையங்களிலும், பஞ்சாப்பில் 54 மையங்களிலும், கோவாவில் 2 மையங்களிலும், மணிப்பூரில் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் மத்திய படையினரின் பாதுகாப்பும், மையங்களுக்கு வெளியே மாநில போலீசாரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களில் முன்னிலை நிலவரங்கள் தெரியத்தொடங்கும். ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது பிற்பகலுக்குள் தெரியவரும்.

PREV
click me!

Recommended Stories

ஓயாமல் லவ் டார்ச்சர்.. கதறிய பெண் ஆசிரியை.. விடாத பள்ளி மாணவன்.. இறுதியில் நடந்தது என்ன?
சோனியாவின் இந்திய குடியுரிமையில் அரசியல் சதி..! நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் விளக்கம்..!