Election Results : உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
5 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்த உ.பி. சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04% வாக்குகள் பதிவாகி யிருந்தன.
அதேபோல் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகின. உத்தரகாண்ட் மாநிலத்திலும், கோவாவிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் மொத்தம் 65.37 % வாக்குகள் பதிவானது. அதேபோல் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் 79.61% வாக்குகள் பதிவாகின.
இதில் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 5-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.