
மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள இந்த டீக்கடை கடந்த 100 ஆண்டுகளாக ஒரு நாள்கூட மூடப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு டீ வழங்கி வருகிறது. இந்த டீக்கடை பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. உரிமையாளர் காலையில் டீக்கடையைத் திறந்துவிட்டு வேலைக்குச் சென்று விடுவார். டீக்கடையில் யாரும் இருக்க மாட்டார்கள்.
ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மற்றும் சில வாடிக்கையாளர்களே இங்கு டீ போட்டு வழங்குவார்கள். இவர்களுக்கு எந்த சம்பளமும் இல்லை. வாடிக்கையாளர்கள் டீ குடித்துவிட்டு பணம் செலுத்துவார்கள். இரவில் உரிமையாளர் வந்து டீக்கடையை மூடுவார். இந்த டீக்கடை கடந்த 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் டீக்கடை.
இந்த டீக்கடையின் தற்போதைய உரிமையாளர் அசோக் சக்ரவர்த்தி. காலை 7 மணிக்கு அசோக் சக்ரவர்த்தி டீக்கடையைத் திறந்துவிட்டு, தனது வேலைக்குச் சென்று விடுவார். மீண்டும் அசோக் மாலை 7 மணிக்குத் திரும்பி வந்து டீக்கடையை மூடுவார். ஒவ்வொரு நாள் காலையிலும் அசோக் சக்ரவர்த்தி டீக்கடைக்குத் தேவையான பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மாலையில் கடையை மூடிவிட்டு, விற்பனைப் பணத்தை எடுத்துச் செல்வார். இங்கு அசோக் எந்த ஊழியர்களையும் வைத்துக் கொள்ளவில்லை. அவரது நண்பர்களோ, குடும்பத்தினரோ இந்த டீக்கடையை நடத்துவதில்லை.
இங்கு வாடிக்கையாளர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். எல்லாம் நம்பிக்கையின் மீதுதான் நடக்கிறது. பல சமயங்களில் வாடிக்கையாளர்களே இங்கு டீ போட்டு மற்றவர்களுக்கு வழங்குவார்கள். வாடிக்கையாளர்கள் வந்து டீ போட்டு குடித்துவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். பின்னர் பணத்தைப் பெட்டியில் வைத்துவிட்டு, சில்லறையை எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள்.
வாடிக்கையாளர்களே டீ போடுகிறார்கள், வாடிக்கையாளர்களே பணம், சில்லறை பரிமாற்றம் செய்கிறார்கள். இங்கு எந்த ஷிப்ட்டும் இல்லை, யாரும் வேலைக்கு இல்லை, யாருக்கும் சம்பளம் இல்லை. கடந்த 100 ஆண்டுகளாக இந்த டீக்கடை இப்படித்தான் நடக்கிறது. வெறும் டீ குடிக்கும் இடமாக மட்டுமல்லாமல், ஒத்த எண்ணம் கொண்டவர்கள் கலந்துரையாடும் இடமாகவும் மாறியுள்ளது.
இந்த டீக்கடையைத் தொடங்கியவர் நரேஷ் சந்திர ஷோம். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். பிரிட்டிஷ் காலத்தில் இந்த டீக்கடையைத் தொடங்கிய நரேஷ் சந்திர பல போராட்டங்களில் பங்கேற்றார். சுபாஷ் சந்திர போஸின் போராட்டம் உட்பட பல சுதந்திரப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து, போராட்டங்களில் பங்கேற்றார். பிரிட்டிஷ் கட்டுப்பாடுகளால் டீக்கடையில் போராட்ட வீரர்களின் பேச்சுவார்த்தைகள், தகவல் பரிமாற்றம் நடைபெற்றன. அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களும் வாடிக்கையாளர்கள் போல வந்து தகவல் பரிமாற்றம் செய்து கொள்வார்கள். பின்னர் இந்த டீக்கடை தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்துள்ளது. ஒவ்வொருவரும் அதே அர்ப்பணிப்புடன் இந்த டீக்கடையை நடத்தி வந்துள்ளனர். இப்போது அசோக் சக்ரவர்த்தியும் தனது வேலைக்கு இடையே டீக்கடையை மூடவில்லை. நரேஷ் சந்திர சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, இதேபோல் மற்றவர்கள், இளைஞர்கள் டீ போட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர். இதே முறை இப்போதும் தொடர்கிறது. இப்போது வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், அவர்களே டீ போடுகிறார்கள், பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த டீக்கடையைப் பல ஓய்வு பெற்றவர்கள் நிர்வகிக்கின்றனர். உரிமையாளர் டீக்கடையைத் திறந்த பிறகு, ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்கள் இங்கு வந்து நேரத்தைச் செலவிடுகிறார்கள். அப்போது டீ போட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள். கூடவே பேசிக்கொள்கிறார்கள். சேகரிக்கப்பட்ட பணத்தைப் பெட்டியில் வைத்துவிட்டு, மாலை நேரத்தில் சென்று விடுவார்கள். இரவு நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டீ தேவைப்பட்டால், அவர்களே டீ போட்டுக் குடிப்பார்கள். பின்னர் பணத்தைப் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்று விடுவார்கள்.