india@75: முண்டா புரட்சிக்கு வித்திட்டவர்.. பழங்குடி தலைவர் பிர்சா முண்டா போர் குணத்தை போற்றுவோம்...!

By Kevin KaarkiFirst Published Jul 2, 2022, 11:40 PM IST
Highlights

இந்த சமயத்தில் தான் ஆங்கிலேயர்கள் பழங்குடி இனத்தவர் வசித்த பகுதிகளுக்குள் நுழைந்து அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டனர்.

புனிதத் துவம் மிக்க தேசிய பாராளுமன்ற அவையில் சுதந்திர போராட்ட வீரர்களில் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். இவரின் பெயர் தான் பிர்சா முண்டா. காலணி ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்டவர்களில் பல்வேறு பழங்குடி இன குழுக்கள் இடம்பெற்று உள்ளன. எனினும், இவைகளில் முண்டா புரட்சி மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக விளங்குகிறது. பிர்சா முண்டாவே இதற்கு தலைமை வகித்தார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முண்டா பிறந்த ஊர் தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்து இருந்தது. இது வங்க நாடு, குண்டி, தமார், சர்வதா மற்றும் பண்ட்கவுன் கிராமங்கள் இந்த பகுதியை உள்ளடக்கி இருந்தன. காடுகள் மற்றும் மலைப் பகுதிகள் இங்கு வசித்த பழங்குடி இனத்தவருக்கு வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் வழங்கி வந்தது. இங்கு வசித்த பழங்குடி இனத்தவருக்கு மலைகள் மற்றும் காட்டு பகுதிகள் அவர்களின் உடல் மற்றும் ஆன்மா போன்றவே விளங்கியது.

ஆங்கிலேய ஆக்கிரமிப்பு:

இந்த சமயத்தில் தான் ஆங்கிலேயர்கள் பழங்குடி இனத்தவர் வசித்த பகுதிகளுக்குள் நுழைந்து அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டனர். மேலும் பழங்குடி இனத்தவரின் வாழ்க்கையை பறித்துக் கொண்டனர். இவர்கள் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டதோடு, நியாயமற்ற முறையில் நடந்து கொண்டனர். பொருளாதார ரீதியிலும் அவர்கள் நியாயமற்ற முறையிலேயே நடந்து கொண்டனர். 

இதன் காரணமாக பழங்குடி இன மக்களின் கலாச்சார அடையாளமும் பறிக்கப்பட்டது. திட்டமிட்ட மதமாற்ற நடவடிக்கைகள் பழங்குடி இன உலகையே அடியோடு மாற்றியது. நூற்றுக் கணக்கான குடும்பங்களை போன்றே பிர்சாவின் குடும்பமும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். பிர்சாவின் பெயர் பிர்சா டேவிட் என்று மாறியது. அவர் ஜெர்மனி மிஷன் பள்ளியில் சேர்ந்தார்.

புரட்சி, போர் குணம்:

தன் வாழ்வில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு கடந்து செல்ல புல் தின்று உயிர் வாழும் ஆடுகள் மற்றும் இசை மட்டும் தான் உதவி இருக்கிறது. வளரும் போதே அரசியல் மற்றும் கலாச்சார ரீதியில் பிர்சா விழித்துக் கொண்டார். அதன் பின் ஆங்கிலேய காலணத்துவத்துக்கு எதிரான சண்டையின் போது, கிறிஸ்துவ அடையாளத்தை பிர்சா துறந்து விட்டார். இவர் பழங்குடி இன மக்கள் மத்தியில் ராணியின் ஆட்சியை களைந்து, நமக்கென சொந்த ஆட்சியை உருவாக்கிக் கொள்வோம் என கூறி ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்தார்.

மிக இளமை பருவத்திலேயே பிர்சா அதிக பிரபலமான தலைவராக உருவெடுத்தார். இவரை அனைவரும் உலகின் தந்தை என அழைக்க துவங்கினர். தனது சமூகத்தில் இறைத் தூதர் என்ற மரியாதை பெறும் அளவுக்கு பிர்சா உயர்ந்தார். இதைத் தொடர்ந்து பிர்சா தலைமையிலான ஆயுத படை பல்வேறு பகுதிகளுக்கும் பரந்து விரிவடைந்தது. ஆங்கிலேய ஆக்கிரமிப்புகள் மற்றும் காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன.

இளம் வயதில் தியாகி:

காட்டுப் பகுதிகள் முழுக்க இரத்தம் மற்றும் வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டன. அதிக அளவு வன்முறையை தொடர்ந்து கிழக்கு இந்திய நிறுவனம் பெரும் படையை கொண்டு பழங்குடி இனத்தவர்களை அடக்கினர். ஆயிரக் கணக்கானோரை சுற்றி வளைக்கப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். முதலில் இங்கு இருந்து தப்பித்த பிர்சா சிங்பம் மலைக்கு தென்றார். அதன் பின் சக்ராதர்பூர் காட்டுப் பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். 

தனது 25 ஆவது வயதில் பிர்சா ஆங்கிலேய சிறையில் தியாகி ஆனார். தற்போது ஜார்கண்ட் துவங்கி கர்நாடகா மாநிலம் வரை பல்வேறு பகுதிகளில் பிர்சா தலைவராக பார்க்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் ஜன்ஜடியா கௌரவ் திவாஸ் ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாஸ்வேதா தேவியின் பிரபல அரன்யர் அதிகர் படைப்புக்கு பிர்சா தான் தூண்டுகோளாக இருந்துள்ளார். 

click me!