இந்த 4 பொருட்களை விட்டு விலகி இருங்கள்- புற்றுநோய் பாதிப்பு வராது...!!

By Dinesh TGFirst Published Nov 20, 2022, 7:31 PM IST
Highlights

உங்கள் சமையலறையில் பயன்படுத்தப்படும் முக்கியமான 4 பொருட்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான சமயங்களில் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு இந்த 4 பொருட்கள் தான் காரணமாக உள்ளன. வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால், விரைவில் அவற்றை அகற்றவும்
 

புற்று நோய் உலகை வேகமாக அழித்து வருகிறது. இந்த நோயை எதிர்த்துப் போராட பல வகையான சிகிச்சைகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் புற்றுநோய் என்ற பெயரைக் கேட்டால் அனைவருக்கும் மூச்சுத் திணறுகிறது. புற்றுநோயின் அறிகுறிகளை யாரிடமாவது சொன்னால், ஒட்டுமொத்த குடும்பமும் பீதியின் நிழலில் வாழத் தொடங்குகிறது. இன்று நாம் உங்கள் சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பற்றி பேசுவோம். அவை புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால், விரைவில் அவற்றை அகற்றவும், இல்லையெனில் நீங்கள் பின்னர் வருந்தலாம்.

பழைய மசாலா பொருட்கள்

இரண்டு மூன்று மாதங்களுக்கு கரம் மசாலாவை வாங்கி சமையலறையில் வைத்திருப்பார்கள், ஆனால் அந்த மசாலாவை முழுமையாகப் பயன்படுத்த முடியாது, அதன் விளைவாக அவை கெட்டுப்போகின்றன. காய்கறிகளில் இத்தகைய மோசமான மசாலாப் பொருள்களைச் சேர்ப்பது உணவு நச்சுக்கு வழிவகுக்கிறது, இது பின்னர் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே முடிந்தால், அவ்வப்போது புதிய மசாலாப் பொருட்களை வாங்கி, சமையலறையில் வைக்கவும்.

தேநீர் பைகள் கொண்டு டீ குடிப்பது

பல தேநீர் பைகளில் பி.சி.வி மூலப்பொருள் உள்ளன. அதில் நைலான் மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த தேநீர் பைகளை வெந்நீரில் அமிழ்த்தும்போது, மூன்று கலவைகளும் உடைக்கத் தொடங்கும். இதன் காரணமாக, கார்சினோஜென் எனப்படும் ஒரு பொருள் உருவாகிறது. இது பின்னர் புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே டீ பேக் உபயோகத்தை குறைப்பது நல்ல பலனை தரும்.

உணவுகளை அலுமினியத் தாளில் சுற்றி வைக்கும் போது கவனிக்க வேண்டியவை..!!

நான் - ஸ்டிக் பாத்திரங்கள்

சமையலறையில் இருக்கும் பல நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய வேதிப்பொருள் பெர்ஃப்ளூரோக்டேன் சல்பேட் என்று அழைக்கப்படுகிறது. இது ஷாம்புகள், நீர்ப்புகா ஆடைகள், சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் ஒட்டாத சமையல் பாத்திரங்களில் காணப்படுகின்றன. அத்தகைய கொள்கலன்களில் உணவை சமைப்பதன் மூலம், வாய்வழியாக ரசாயனங்கள் உடலுக்குள் புகுந்துவிடும். அதன்மூலம் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. 

பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்

பிஸ்பெனால் ஏ (பிபிஏ) என்ற வேதிப்பொருள் பிளாஸ்டிக்கை கடினப்படுத்தப் பயன்படுகிறது.பிளாஸ்டிக் மதிய உணவு பெட்டிகள் மற்றும் பிற சமையலறை பாத்திரங்கள் இந்த இரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இந்த கொள்கலன்களில் உள்ள காய்கறிகளை சூடுபடுத்தும் போது, ரசாயனமும் கரைந்து பிளாஸ்டிக்கில் கலப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் படிப்படியாக அதிகரிக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.
 

click me!