நம் நாட்டில் எண்ணெற்ற மூலிகை பயன்கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன. அப்படி ஒன்றுதான் முருங்கைக் கீரை. அவற்றின் நன்மைகள் எளிதில் கூறி சுருக்கிட முடியாது. அவ்வளவு பயன்களை தருபவை.
முருங்கைக் கீரை:
முருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம் மற்றும் முக்கியமான ஃபைடோ சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே புற்று நோயை எதிர்க்கக் கூடியவை.
அதோடு தினமும் அதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும்.
முருங்கைக் கீரையை உபயோகப்படுத்தும் முறை:
தேவையானவை :
நீர் – 2 கப்
முருங்கைக் கீரை – அரைக் கப்.
செய்முறை :
நீரை கொதிக்க வையுங்கள். அதில் நன்றாக கழுவிய முருங்கைக் கீரை அரை கப் எடுத்து போட்டு சில நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் அடுப்பை அணைத்து நீரை ஆற வையுங்கள். அதன் பின் வடிகட்டி, அந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன் குடியுங்கள். அந்த வெந்த கீரையை சமைக்க எடுத்துக் கொள்ளலாம்.
என்ன பல:
இந்த நீரை குடித்தால் உங்களை எந்த நோயும் நெருங்காது.
சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.
புற்று நோயை தடுக்கலாம்.
ரத்த சோகை இருப்பவரகளுக்கு ஒரு வாரத்தில் இந்த பிரச்சனை குணமாகும்.