உங்களுக்குத் தெரியுமா? தலைச்சுற்றலை அடியோடு விரட்ட “கறிவேப்பிலை தைலம்” உதவும்…

Asianet News Tamil  
Published : Aug 04, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
உங்களுக்குத் தெரியுமா? தலைச்சுற்றலை அடியோடு விரட்ட “கறிவேப்பிலை தைலம்” உதவும்…

சுருக்கம்

Do you know Curry balm helps to thoroughly deteriorate the headache ..

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம். இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது.

தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம்

கறிவேப்பிலை – 200 கிராம்

பச்சை கொத்தமல்லி – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

நல்லெண்ணை – 600 கிராம்

பசுவின் பால் – 200 மில்லி

செய்முறை:

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும்.

அதன்பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

எப்படி பயன்படுத்தனும்:

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Black Cumin in Winter : குளிர்காலத்தில் கருப்புசீரகம் உண்பதால் இத்தனை நன்மைகளா? முழுநன்மைகள் பெற 'இப்படி' சாப்பிடுங்க!!
எடை குறைய உதவும் நார்ச்சத்து மிகுந்த 6 உணவுகள்!!