
முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் , உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு, ஒன்றில் இருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது,
உதாரணத்துக்கு, தூசியோ, நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள், நம் மூக்கினுள் நுழைந்து விடும்போது, சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.
அதாவது, இந்த மாதிரி தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள், ஹிஸ்டமைன் என்ற வேதி பொருளை வெளிப்படுத்துகின்றன. இந்த ஹிஸ்டமைன் ஆனது, உடனே தும்மல், அரிப்பு, மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்றதொரு உணர்வு, போன்றவற்றை தூண்டி விடுகிறது.
இவ்வாறு தூண்டப்பட்டவுடன் சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட ஆரம்பிக்கின்றன.
சரி...
சளியை விரட்டுவதற்கான தீர்வை பார்க்கலாம்.
1.. முதலில் மூன்று எழுமிச்சையை எடுத்துக் கொண்டு பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
2.. பின்பு, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தன்ணீர் எடுத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
3.. இப்பொழுது, இரண்டு கப் நீர் ஒரு கப் அளவிற்கு சுண்ட கொதிக்க வைத்தவுடன் வெட்டி வைத்துள்ள எழுமிச்சையை அதில் நன்றாக பிழிந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4.. இதனை, இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு மிதமான சூட்டுடன் குடித்து விட்டு தூங்கினால் உடம்பில் உள்ள சளி எல்லாம் வியர்வையாக வெளியேறி விடும்.
5.. இதனை பின்பற்றினால் மருத்துவரை காண வேண்டிய அவசியமே இருக்காது.