தயிர் பிரியர்களுக்கு இந்த பிரச்சனைகள்  எல்லாம் எப்போதும் வரவே வராது...

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
தயிர் பிரியர்களுக்கு இந்த பிரச்சனைகள்  எல்லாம் எப்போதும் வரவே வராது...

சுருக்கம்

Curd lovers do not always come to these issues ...

தயிரில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்...

** தயிர், உடலுக்கு அருமருந்து; 

** குளிர்ச்சியைத் தரும். 

** ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். 

** பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், 91 சதவீதம் ஜீரணமாகிவிடும்.

** பாலில் லாக்டோ என்ற வேதிப் பொருள் கலந்து இருக்கிறது. தயிரில் லாக்டொபஸில் என்ற வேதிப் பொருள் உள்ளது; இது, ஜீரண சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது. 

** வயிறு சரியில்லாத போது, வெறும் தயிர் சோறை மட்டுமாவது, உணவாக உட்கொள்லலாம். 

** அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, ஒரு கப் தயிரில், வெந்தயம் கலந்து சாப்பிட்டால், வயிற்று பொருமல் கட்டுப்படும். 

** பிரியாணி போன்ற உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவு வகைகளை உண்ணும் போது தான் வயிற்றுக்கு அதிக கேடு ஏற்படும்; இதை தவிர்க்க தான், தயிர் உண்கிறோம். 

** தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக ஜீரணமாகி விடும். சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. தயிரும், பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

** மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டோர், தயிர், மோரில் சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். 

** சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்து. 

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!