Sunita Williams
இந்திய வம்சாவளி அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாத காலம் தங்கியிருந்தபோது, விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக, இமயமலையைப் பற்றியும் மும்பை மற்றும் குஜராத் கடற்கரைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
Sunita Williams Speech
செவ்வாயன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ், "இந்தியா அற்புதமானது. நாங்கள் இமயமலையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், புட்ச் இமயமலையை புகைப்படம் எடுப்பார். அது மிகவும் அற்புதமானது என்றுதான் சொல்ல வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
Indian-origin Astronaut Sunita Williams
"நீங்கள் கிழக்கிலிருந்து குஜராத், மும்பை நோக்கிப் பயணிக்கும்போது, கடற்கரையிலிருந்து மீன்பிடி படகுகளைக் காணலாம். அவை ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டு, 'இதோ நாங்கள் வருகிறோம்' என்று தெரிவிக்கின்றன" எனவும் சுனிதா கூறினார்.
NASA Astronaut Sunita Williams
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா "விளக்குகளின் வலைப்பின்னல்" போல இருப்பதாக வர்ணித்த சுனிதா வில்லியம்ஸ், "நாடு முழுவதும், விளக்குகளின் வலையமைப்பு போல் தெரிகிறது. பெரிய நகரங்கள் சிறிய நகரங்களுடன் இணைகின்றன, அவை இரவிலும் பகலிலும் நம்பமுடியாத காட்சிகளை உருவாக்குகின்றன. அதிலும் இமயமலையின் அழகு தனித்து நிற்கிறது" என்றார்.
Sunita Williams Space Journey
குஜராத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், தனது சொந்த ஊரைப் பார்க்கச் செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார். "நான் என் தந்தையின் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று அங்கிருக்கும் மக்களைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன். நிச்சயமாகச் செல்வேன் என்று நினைக்கிறேன்," என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Sunita Williams Returns
கடந்த ஆண்டு ஜூன் மாதம் எட்டு நாள் பயணமாக போயிங் ஸ்டார்லைனர் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றார் சுனிதா வில்லியம்ஸ். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர் பூமிக்குத் திரும்புவது தாமதமானது. இதனால் 280 நாட்களுக்கு மேல் விண்வெளியில் கழித்துவிட்டு, கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர் பூமிக்குத் திரும்பி வந்தார்.