டொனால்ட் டிரம்ப் கருத்து
ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் இந்த தாக்குதலுக்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், 'ஜம்ம்மு காஷ்மீர் தாக்குதல் மிக மோசமானது' என மீண்டும் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முதல் முறையாக பொது வெளியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜம்மு காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பதட்டங்கள் நீடித்து வருவதாகக் கூறினார்.
1000 ஆண்டுகளாக சண்டை
இந்தத் தாக்குதல்களை 'மோசமானவை' என்று குறிப்பிட்ட டிரம்ப்இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது நெருங்கிய உறவை வலியுறுத்தியதால், இரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் குறித்து பேசிய டிரம்ப், ''நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும், அவர்கள் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தைக் கொண்டுள்ளனர். நேற்று நடந்தது மோசமானது தாக்குதல். 30க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்'' என்று தெரிவித்தார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆதரவு அளிக்கிறோம்! உண்மையை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்!