குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்
பஹல்காம் தாக்குதலை "கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்" என்று வர்ணித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில், குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளது. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதம் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஸ்திரமின்மையின் மையம்
எந்த சித்தாந்தமும் அல்லது நோக்கமும் அப்பாவி பொதுமக்களைக் குறிவைப்பதை நியாயப்படுத்தாது என்று வலியுறுத்திய ஐநா பாதுகாப்பு கவுன்சில், மோதல் நிறைந்த பகுதிகளில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த சர்வதேச கவலையை UNSCயின் ஒன்றுபட்ட நிலைப்பாடு பிரதிபலிக்கிறது. ஜம்மு காஷ்மீர் ஸ்திரமின்மையின் மையமாக உள்ளது. குற்றவாளிகள், ஏற்பாட்டாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள் உட்பட இத தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று UNSC வலியுறுத்தியுள்ளது.