UK Cost of Living: இந்தியாவில் கிலோ ₹50-க்கு விற்கும் வெண்டைக்காய், UK-வில் ₹1000 என்றால் நம்ப முடிகிறதா? அங்குள்ள இந்தியர்கள் காய்கறிகளுக்காக படும் கஷ்டத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
UK-வில் இந்தியர்கள் வாழ்க்கை அவ்வளவு சுலபமல்ல - UK Cost of Living
UK-க்கு வேலைக்கோ, படிப்புக்கோ செல்பவர்கள் மாதம் ₹2-3 லட்சம் சம்பாதித்து சொகுசாக வாழ்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நிஜ நிலைமை வேறு. 'Praveen’s Planet' என்ற யூடியூப் சேனல், அங்குள்ள இந்தியர்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வை தெளிவாகக் காட்டுகிறது.
26
கண்ணைக் கட்டும் காய்கறி விலைகள்
யூடியூபர் பிரவீன், UK-ல் உள்ள ஒரு இந்தியன் சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி விலைகளை காட்டுகிறார். பவுண்ட்களில் இருக்கும் விலையை இந்திய ரூபாய்க்கு மாற்றும்போது, நம்ம ஊரில் ₹50-க்கு கிடைக்கும் காய்கறி அங்கே பல நூறு ரூபாய்க்கு விற்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
36
UK சூப்பர் மார்க்கெட்டில் விலை பட்டியல்
பச்சை மிளகாய், பீர்க்கங்காய்: கிலோ சுமார் ₹850. பாகற்காய், கோவைக்காய், வெண்டைக்காய்: கிலோ ₹1,000. எலுமிச்சை: கிலோ ₹800. ஒரு சிறிய முருங்கைக்காய் கட்டு சுமார் ₹1,000. 10 கிலோ சோனா மசூரி அரிசி பை £15 (சுமார் ₹1,600 - ₹1,700). 250 கிராம் அரிசி மாவு பாக்கெட் விலை ₹250.
நடுத்தர வர்க்க குடும்பங்களிலிருந்து UK வந்த இந்தியர்கள், கிலோ வெண்டைக்காய்க்கு ₹1,000 கொடுத்து வாங்கத் தயங்குகிறார்கள். 'லட்சங்களில் சம்பாதித்தாலும், ஒரு கிலோ காய்கறிக்கு இவ்வளவு செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. இங்கு வாழும் நடுத்தர இந்தியர்கள், தின்பதற்கும் திண்டாடி, வாழ்வதற்கும் போராடுகிறோம்' என அந்த யூடியூபர் வேதனையுடன் கூறுகிறார்.
56
ஏன் இந்த அநியாய விலை உயர்வு?
வெண்டை, பாகற்காய் போன்ற காய்கறிகள் UK-யின் குளிரான தட்பவெப்பத்தில் விளையாது. இவற்றை இந்தியாவிலிருந்து விமானம் (Air Freight) மூலமே இறக்குமதி செய்ய வேண்டும். விமான எரிபொருள், கோல்டு ஸ்டோரேஜ் செலவுகள் அதிகம். மேலும், UK உணவு பாதுகாப்பு ஏஜென்சியின் கடுமையான SPS (Sanitary and Phytosanitary) விதிகள், பரிசோதனைக் கட்டணங்கள், Brexit-க்குப் பிறகான ஓட்டுநர் பற்றாக்குறை போன்றவையும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள்.
66
எல்லா கடைகளிலும் கிடைக்காது
இந்த காய்கறிகள் பிரிட்டனின் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்காது. ஆசிய ஸ்டோர்களில் மட்டுமே விற்கப்படுகின்றன. குறைந்த அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், கடைக்காரர்கள் அதிக லாபம் வைத்து விற்கிறார்கள். சம்பளம் பவுண்ட்களில் வந்தாலும், இந்த இறக்குமதி பொருட்களின் விலையால், சாதாரண இந்தியர்கள் கடும் நிதிச் சிக்கலை சந்திக்கின்றனர்.