1570 முதல் 1971 வரை, அட்டகாமா பாலைவனத்தில் மழையே பெய்யவில்லை. 1971ஆம் ஆண்டில், அட்டகாமா பாலைவனத்தில் மழை பெய்தது. அதன் பிறகு நடந்த அட்டகாமா டெசர்ட் ப்ளூம் அனைவரின் கவனத்தையும் அட்டகாமாவின் பக்கர் ஈர்த்தது. திடீரென பெய்த மழையினால் பாலைவனம் முழுக்க வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. எல் நினோ நிகழ்வின் காரணமாக இதேபோன்ற மழை பெய்யும் போதெல்லாம், பாலைவனம் பூத்து குலுங்குகிறது. இயற்கையின் இந்த கண்கவர் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அட்டகாமா சென்றுள்ளனர். கடைசியாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் அட்டகாமா பாலைவனம் பூக்களால் நிறைந்து காட்சி கொடுத்தது.