ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் "நேரடிப் பேச்சுவார்த்தை" நடத்த முன்மொழிந்துள்ளார். "முன்பு நடத்தப்பட்டு, பின்னர் தடைபட்ட பேச்சுவார்த்தையை மே 15 அன்று உடனடியாகத் தொடங்க விரும்புகிறோம்" என்று புதின் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். CNN செய்தியின்படி, பேச்சுவார்த்தைகள் "எந்தவித முன்நிபந்தனைகளும் இல்லாமல்" நடத்தப்பட வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தலைவர்கள் வேண்டுகோள்
"உக்ரைனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்று புதின் கூறினார். மேலும், அவை "மோதலுக்கான மூல காரணங்களை நீக்குவதற்கும்" "நீண்டகால, நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கும்" நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். CNNன்படி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் போலந்து தலைவர்கள் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு புதினை வலியுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த முன்மொழிவு வந்தது.