அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூகிள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற சில அமெரிக்க நிறுவனங்கள் பின்பற்றும் தீவிர உலகமயமாக்கலை கைவிட வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட அயல்நாடுகளில் தொழிற்சாலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், நீண்ட காலமாக, அமெரிக்க தொழில்நுட்பத் துறை தீவிர உலகமயமாக்கலைப் பின்பற்றியதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையில்லாமல் அவநம்பிக்கை அடைந்தனர் என்றும் இது அமெரிக்கர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கூறினார்.