சக்திவாய்ந்த X2.7-வகுப்பு சூரியப் புயல் பூமியைத் தாக்கக்கூடும் என்றும், உலக அளவில் மின் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புகளும் பாதிக்கப்படலாம்.
பூமிக்கு மிகப் பெரிய சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என்றும், அது உலக அளவில் மின் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் நாசா எச்சரித்துள்ளது. கடந்த மே 14 அன்று ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த X2.7-வகுப்பு சூரியப் புயலின் தாக்கத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகம் (Solar Dynamics Observatory) இந்த சூரியப் புயலைப் பதிவு செய்தது. இந்த புயல் AR4087 என்ற புதிய சூரியக் கரும்புள்ளியில் இருந்து கிளம்பியதாக நாசா கூறுகிறது. இதன் உடனடி பாதிப்பாக ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் தற்காலிக வானொலி பாதிப்பு (radio blackouts) ஏற்பட்டுள்ளது.
24
சூரியப் புயலின் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?
நாசாவின் அறிக்கையின்படி, வரவிருக்கும் நாட்களில் சூரிய செயல்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் தீவிரமான சூரியப் புயல்கள் பூமியில் உள்ள தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்பு (power grids) ஆகியவற்றைப் பாதிக்கலாம்.
34
மின் தடை, தகவல் தொடர்பு பாதிப்பு
மின் தடைகள்: மின்சார விநியோகத்தில் பெரிய அளவிலான தடைகள் ஏற்படலாம். இதனால் நீண்ட காலத்திற்கு மின்சாரம் இல்லாமல் போகக்கூடும்.
தகவல் தொடர்பு பாதிப்பு: மொபைல் போன் சேவைகள், இணையம், செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் (GPS) போன்ற தகவல் தொடர்பு அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
விமான மற்றும் விண்வெளி பயணம்: விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளிப் பயணங்கள் பாதிக்கப்படக்கூடும்.
இந்த சூரியப் புயல்களின் தாக்கத்தால், பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் துருவ ஒளிகளை (auroras) இன்னும் பல இடங்களில் பார்க்க வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூரியப் புயலின் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகள் பூமியின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை பாதிக்கக்கூடும் என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.