புதிய நிர்வாகம், குறிப்பாக மொஜ்தபா காமெனி தலைமையிலான குழு, வெளிநாட்டு அழுத்தங்களையும் பாதுகாப்பு சிக்கல்களையும் சமாளிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இறுதிச் சடங்கு போன்ற பெரிய நிகழ்வுகளை உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் பயம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். போர்நிலை ஓரளவு அமைதியாக இருந்தாலும், சூழ்நிலை முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லை என்பதே அவர்களின் மதிப்பீடு.