பல்வேறு நாடுகளின் தலையீட்டின்பேரில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே 42 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்ததையும் மீறி இரு தரப்பினரும் தாக்குவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. போர் நிறுத்த ஒப்பந்த காலம் முடிந்தபிறகு, பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டாலும் ஹமாஸ் அதனை ஏற்கவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ படைகள் காசாவில் பெரிய பகுதிகளை கைப்பற்றி பாலஸ்தீன பிரதேசத்தை சிறியதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மாற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், 'காசாவில் உள்ள மிகப்பெரிய பகுதிகளை எங்களின் ராணுவம் கைப்பற்றி விட்டது. அந்த பகுதி இப்போது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பாலஸ்தீனம் சிறுமைப்படுத்தப்பட்டு, தனித்து விடப்பட்டுள்ளது. ஹமாஸ் பிணையக் கைதிகளை விடுவிக்கும் வரையியிலும், முழுமையாக ஹமாஸை ஒழித்துக்கட்டும் வரையிலும் போரை நிறுத்த மாட்டோம்'' என்றார்.
பதில் வரியை 90 நாள் நிறுத்திவைத்த டிரம்ப்; சீனாவுக்கு மட்டும் வரி மேல் வரி!