டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு.! வெளியான ஷாக் தகவல்- அதிர்ச்சியில் அமெரிக்கா!

Published : Sep 16, 2024, 07:00 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பை நோக்கி மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஃபுளோரிடாவில் கோல்ஃப் மைதானத்தில் அவர் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும் சரணடையப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

PREV
13
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு.! வெளியான ஷாக் தகவல்- அதிர்ச்சியில் அமெரிக்கா!
TRUMP KAMALA

அமெரிக்கா அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதற்கான அதிபர் நாற்காழியில் யார் அமர்வது என்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அதிப்ர டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக களத்தில் இறங்கியுள்ளார். இவருக்கு போட்டியாக முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் களம் இறங்கினார். ஆனால் வயது முதிர்வு மற்றும் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் தற்போது துணை அதிபராக இருக்கும் கலமா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளானர். இந்த இரண்டு பேருக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது.

23

அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்

அதிபர் வேட்பாளர்கள் ஒவ்வொரு மண்டலமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இரண்டு பேருக்கும் இடையே நேரடி விவாதங்களும் நடைபெற்றுள்ளது. இதனிடையே அதிபர் வேட்பாளராக போட்டியிடக்கூடிய டொனால்ட் டிரம்ப்க்கு கொலை மிரட்டல்க்ள அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது. இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

33

மீண்டும் துப்பாக்கி சூடு

இந்த நிலையில் மீண்டும் இதே போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோல்ப் விளையாடிக்கொண்டிருந்த போது எனது அருகாமையில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக கூறியுள்ளார். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே எப்போதும் நான் சரண்டைய மாட்டேன் என கூறியுள்ளார். இதனிடையே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வெஸ்லி ரூத் என்பவவரை எப்பிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories