சீனா மீது கூடுதலாக 50% வரி! போட்டுத் தாக்கும் டொனால்ட் டிரம்ப்! 1 நாள் கெடு விதிப்பு!

Published : Apr 08, 2025, 09:59 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து ஒருநாள் கெடு விதித்துள்ளார்.   

PREV
14
சீனா மீது கூடுதலாக 50% வரி! போட்டுத் தாக்கும் டொனால்ட் டிரம்ப்! 1 நாள் கெடு விதிப்பு!

Donald Trump imposes additional 50% tariffs on China: அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் ‍பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் பரஸ்பர விதிகளை விதித்துள்ளார். டிரம்பின் செயலால் அதிர்ச்சி அடைந்த சீனா அமெரிக்கா பொருட்களுக்கு அதிரடியாக 34% வரி விதித்தது.

24
Donald Trump imposes additional 50% tariffs on China

சீனாவின் இந்த அறிவிப்பால் டொனால்ட் டிரம்ப் பொங்கியெழுந்தார். அதாவது சீனா இந்த வரி விதிப்பை பெற திரும்ப பெறாவிட்டால் சீனா மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது டிரம்பின் வரிகளில் சீனாவின் எண்ணிக்கையை 94 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக விதித்துள்ள கூடுதல் வரியை திரும்பப் பெறவோ அல்லது திரும்பப் பெறவோ சீனா அதிபர்  ஜி ஜின்பிங்கிற்கு ஜனாதிபதி டிரம்ப் 24 மணி நேர வாய்ப்பை வழங்கினாலும், அது தவறினால், சீனப் பொருட்கள் மொத்தமாக இந்த திருத்தப்பட்ட 94 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடும்.

ஆசியா-ஐரோப்பாவில் பங்குச் சந்தை சரிவு.. முட்டு கொடுக்கும் ட்ரம்ப்.. எல்லாமே போச்சா?
 

34
US President Donald Trump

''சீனா ஏற்கெனவே வரிகள், நாணயமற்ற வரிகள், நிறுவனங்களுக்கு சட்டவிரோத மானியம் மற்றும் பாரிய நீண்ட கால நாணய கையாளுதல் ஆகியவற்றுடன் கூடுதலாக 34 சதவீத பழிவாங்கும் வரிகளை விதித்தது, மேலும், கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் எந்தவொரு நாடும், புதிய கூடுதல் வரிகளை எதிர்கொள்ளும்'' என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ''சீனா 34 சதவீத அதிகரிப்பை நாளை (அதாவது இன்று ஏப்ரல் 8) திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்கா ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் சீனா மீது 50 சதவீத கூடுதல் வரிகளை விதிக்கும்" என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

44
USA-China Trade War

இந்த வர்த்தக போருக்கு மத்தியில், சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்காத நாடுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "கூடுதலாக, எங்களுடன் அவர்கள் கோரிய சந்திப்புகள் தொடர்பாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும்! சந்திப்புகளைக் கோரிய பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று டிரம்ப் சமூகவலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் வரி விதிப்பால் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் இது வர்த்தக போருக்கு வழிவகுக்குமே தவிர, யாருக்கும் பயனில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்க டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 72 மணி நேரமாக உலகளாவிய பங்குச் சந்தைகள் மற்றும் கச்ச எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜே-50 ஷெங்காட்! சீனாவின் அதிநவீன போர் விமானம்! இந்திய எல்லைக்கு பெரும் அச்சுறுத்தல்!

Read more Photos on
click me!

Recommended Stories