ஈரான், இஸ்ரோல், அமெரிக்கா இடையேயான போர் உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), ஈரானில் உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்கியதாக சில வீடியோக்களை வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில், தரையில் நின்றுகொண்டிருந்த ஈரான் ராணுவத்திற்குச் சொந்தமான Mi-17 ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஏவுகணை மூலம் இஸ்ரேல் துல்லியமாகத் தாக்கி அழிப்பது போன்ற காட்சிகள் இருந்தன.
ஆனால், இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் வெடித்தது. இஸ்ரேல் ஏவுகணை வீசி அழித்தது உண்மையான ஹெலிகாப்டர் அல்ல, அது எதிரிகளை ஏமாற்றுவதற்காகத் தரையில் வரையப்பட்ட ஒரு 'முப்பரிமாண ஓவியம்' (3D Painting/Decoy) என்று பலரும் ஆதாரங்களுடன் பதிவிடத் தொடங்கினர்.