கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், 2025 மேலும் வெப்பமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது உலகளவில் காலநிலை மாற்றம் துரிதப்படுவதற்கான கவலைகளை எழுப்புகிறது. மனிதர்களின் நடவடிக்கைகள் மாறாவிட்டால், பிரச்சனை மோசமடையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும், ‘உலகம் இதுபோன்ற ஒரு பத்தாண்டுகாலத்தைப் பார்த்ததில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகின் வெப்பமான 10 ஆண்டுகளில் ஒவ்வொன்றும் தற்போதைய தசாப்தத்தில் உள்ளன. காலநிலை சமநிலை மோசமடைந்து வருகிறது, இது மிகவும் கவலைக்கிடமானது. கார்பன் உமிழ்வுகள் கணிசமாகக் குறைக்கப்படாவிட்டால், தப்பிக்க வழியில்லை’ என்று கூறினார்.