Chandrakala Treasure Box Drama Logic Less Magic in Karthigai Deepam : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1134ஆவது எபிசோடில் இயக்குநர் புதிய டுவிஸ்டாக புதையலை வைத்து தனது டிராமாவை அரங்கேற்றியுள்ளார்.
கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்ற ஜோதிடரின் வாக்கு பொய் என்று கார்த்திக் நிரூபித்துவிட்டார். இதனால் சாமுண்டீஸ்வரி தனது மகள் ரோகிணி வயிற்றில் வளரும் குழந்தை இந்த வீட்டின் வாரிசு என்று ஏற்றுக் கொண்டார். வாரத்தின் கடைசி நாள் என்பதால், கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து தொடர்ச்சியாக காட்சி ஒளிபரப்ப வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
25
Chandrakala Double Master Plan Tamil
இதன் காரணமாக இன்றைய 1134ஆவது எபிசோடில் இயக்குநர் புதிய டுவிஸ்டாக புதையலை வைத்து தனது டிராமாவை அரங்கேற்றியுள்ளார். அதாவது, கோயில் வளாகத்தில் புதிதாக சன்னதி எழுப்புவதற்கு குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது குழி தோண்டும் இடத்தில் ஒரு பானை மற்றும் அண்டா நிறைய பழங்காலத்து நகைகள் இருந்துள்ளன. இதையெல்லாம் பார்த்த கிராம வாசிகள் ஆளு ஆளுக்கு தங்களது கஷ்டங்களுக்காக நகைகளை பகிர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
35
Karthigai Deepam Serial Logicless Scenes
ஒருவர் எனக்கு பிஸினஸ் செய்ய வேண்டும், ஒருவர் மகள்களின் திருமணத்தை நடத்திவிடுவேன், இன்னொருவர் என்னுடைய கஷ்டங்களை நான் அடைத்துவிடுவேன். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் நகையை பார்த்ததும் ஆட்டைய போட பிளான் போட்டனர். ஆனால், அதற்கு வழிவிடாமல் சாமுண்டீஸ்வரி ஆர்க்கியாலஜி துறை என்று சொல்லப்படும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க இருப்பதாக அந்த துறைக்கு போன் போட்டு நடந்தவற்றை எடுத்து கூறினார். ஆனால், அவர்களும் வெளியில் சென்றிருப்பதால் இன்று வர முடியாது. நாளை தான் வர முடியும் என்றார்.
45
Chandrakala Treasure Plan Karthigai Deepam
இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி எல்லா நகைகளையும் தனது வீட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்தார். அப்போது கார்த்திக் நீங்கள் வீட்டிற்கு எடுத்து வந்தது தவறு. போஸ் ஸ்டேஷனில் தான் ஒப்படைத்திருக்க வேண்டும். நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்திருக்க கூடாது என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி நீ என்ன சொல்லுறது நான் என்ன கேட்பது என்ற பிடிவாதத்தில் முடியாது.
55
Karthigai Deepam Serial Today Episode 2026
இந்த நகைகள் மொத்தமும் தனது வீட்டில் தான் இருக்கும் என்றார். இதற்கிடையில் சந்திரகலா தனது கணவரை சந்தித்து நகையை ஆட்டைய போட திட்டமிட்டார். இதன் மூலமாக சாமுண்டீஸ்வரியையும், கார்த்திக்கையும் ஒரே நேரத்தில் பழி வாங்கலாம் என்று திட்டமிட்டார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடி முடிந்தது. அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்