மறுநாள் மகாலட்சுமி ஆதார் கார்டை கொண்டு வராததால் சந்தேகம் அடைந்த ஜெயின் தாலியை உரசிப் பார்த்துள்ளார் அப்போது அது போலி தங்கம் என கண்டுபிடித்த அவர் போலீசில் புகார் அளித்ததோடு, அடகு கடை நடத்தி வரும் தன்னுடைய நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தில் அடகு கடை நடத்தி வரும் சுரேந்தர் குமார் என்பவரும் தன்னுடைய கடையில் இதேபோன்று ஒரு வாரத்திற்கு முன் பெண் ஒருவர் மோசடி செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து சுரேந்தரும் இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து மகாலட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் இதே போல் திருவிக நகர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று போலி நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படியுங்கள்... இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா! மார்ச் 3-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட் இதோ