தனிக்குடித்தனம் சென்ற செந்தில்: பால் காய்ச்சிய மீனாவிற்கு பரிசு கொடுத்த பாண்டியன்– பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Published : Oct 10, 2025, 07:21 PM IST

Meena Accept Pandian Gift : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 608ஆவது எபிசோடில் தனிக்குடித்தனம் சென்ற மீனா மற்றும் செந்திலுக்கு பாண்டியன் பரிசாக பணம் கொடுத்துள்ளார்.

PREV
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான பிரச்சனைகள் வைத்து எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் முழுவதும் செந்தில் மற்றும் மீனா தனிக்குடித்தனம் செல்வது பற்றிய பஞ்சாயத்து நடந்து கடைசியில் செந்தில் மீனாவை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றார். அரசு வேலை பார்க்கும் மீனாவிற்கு அரசு விடுதி கொடுக்கப்பட்ட நிலையில் அதனை வாங்கி அங்கு செல்ல வேண்டும் என்று செந்தில் ஒற்றைக் காலில் நின்று இப்போது தனிக்குடித்தனமும் சென்றுவிட்டார்.

25
தனிக்குடித்தனம் சென்ற மீனா செந்தில்

பாண்டியன் ஸ்டொர்ஸ் 2 சீரியலில் இன்றைய 608ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் மீனா தங்களது வீட்டில் பால் காய்ச்சினர். முதலில் பாண்டியன் வராத நிலையில் பாய் காய்ச்சும் நேரத்திற்கு வந்துவிட்டார். மீனா அவரது அத்தை கோமதியை பால் காய்ச்ச சொன்னார். ஆனால், அவரோ மீனாவின் அம்மாவை பால் காய்ச்ச சொன்னார். ஆனால், மீனா, அதெல்லாம் வேண்டாம், நீங்களே காய்ச்சுங்கள் அத்தை என்றார்.

35
தனிக்குடித்தனம் சென்ற செந்தில்

அதன் பின்னர் தான் கோமதி பால் காய்ச்சினார். இதைத் தொடர்ந்து குழலி, கதிர் ஆகியோர் பரிசுகளை கொடுக்க சரவணன் தன் பங்கிற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், பழனிவேல் மட்டும் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், சுகன்யா ஆத்திரமடைந்தார். மேலும், சரவணனிடம் தனியாக பேசிய தங்கமயில் இது போன்று தங்களுக்கும் ஒரு அரசு விடுதி (Quarters) யில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

உயிருக்கு போராடும் நவீன் - கொலை பழியில் சிக்குவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

45
பால் காய்ச்சிய செந்தில்

இதைப் புரிந்து கொண்ட சரவணன், அதற்கு நீங்கள் தான் எம் ஏ முடித்துவிட்டீர்கள். அதனால், அரசு வேலை வாங்கினால், அவர்கள் கொடுக்கும் போது நாம் அப்படியே தனிக்குடித்தனம் செல்லலாம் என்றார். இறுதியாக பழனிவேல் மற்றும் சுகன்யா இருவரும் தனியாக சந்தித்து பேசி தங்களது வருத்தத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும், பழனிவேலுவிற்கு அவரது அண்ணன்கள் தனியாக ஒரு மளிகை கடை வைத்துக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். பழனிவேலுவும் இப்போது கடையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு அண்ணன்கள் வைத்துக் கொடுக்கும் கடைக்கு சென்றுவிடுவார் என்று தெரிகிறது.

55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய அப்டேட்

பாண்டியனும் இப்போது கதிரின் பாண்டியன் டிராவல்ஸிற்கு வந்து செல்லும் நிலையில் இனி வரும் காலங்களில் மாணிக்கம் மற்றும் பாக்கியம் இருவரும் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை சரவணனுக்கோ அல்லது தங்கமயில் பெயருக்கோ எழுதி கொடுக்கும் நிலை ஏற்படும். அப்படி நடக்கும் சூழலில் பாண்டியன் நடுத்தெருவிற்கு வருவதோடு கதிர் மற்றும் ராஜீயின் கடையை கவனித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹலோ டேடி... ஆரம்பிக்கலாமா? போட்டோ போட்டு மாதம்பட்டி ரங்கராஜை சீண்டிய ஜாய் கிரிசில்டா

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories