Thangamayil Rejoin With Family in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்ல் புதிய டுவிஸ்டாக தங்கமயில் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் மீனாவை சந்தித்து பேசி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் குடும்பம் இப்படி ஆளுக்கு ஒரு மூலையில் இருக்க முக்கிய காரணமே தங்கமயிலும் அவரது பெற்றோரும் தான். தன்னுடைய மகள் காலேஜ் படித்திருக்கிறாள், கோல்டு மெடல் என்றும், 80 சவரன் நகை போடுகிறோம் என்றும் சரவணனை விட வயதில் குறைவு தான் என்றும் இப்படி அடுக்கடுக்கான பொய்களை சொல்லி சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
24
தங்கமயிலின் உண்மை முகம் அம்பலம்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
திருமணத்திற்கு பிறகு சரவணனுக்கு ஒவ்வொரு உண்மையாக தெரிய வரவே தங்கமயிலுக்கும் சரவணனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களது அறைக்குள் மட்டுமே இருந்த கணவன் மனைவி சண்டை நாளடைவில் பூகம்பமாக வெடிக்க ஆரம்பித்தது. இதைப் பற்றி பாண்டியனுக்கு தெரியவர தங்கமயிலின் பெற்றோரை வர வழைத்து அவரை வீட்டைவிட்டு வெளியில் துரத்திவிட்டனர்.
34
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
பின்னர் சரவணன் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்ப, தங்கமயிலின் அம்மா பாக்கியம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதில் பாண்டியனின் மொத்த குடும்பமும் மீனாவைத் தவிர போலீசார் விசாரணை என்ற பெயரில் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதில் ராஜீ மற்றும் அரசி ஆகியோர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
44
சரவணன் தங்கமயில் மீண்டும் இணைவார்களா?
மற்ற அனைவரும் ஜெயிலில் கம்பி எண்ணினர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வரவே சக்திவேல் மற்றும் முத்துவேல் ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாண்டியன் கூடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் இப்போது தங்கமயில் மீனாவை சத்தித்து பே வரும் நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எப்போது என்று தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இனி வரும் எபிசோடுகளை பார்க்கலாம்.