Gomathi and Muthuvel Family Unity in Pandiyan Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கோமதி அண்ணன் வீட்டார்களுடன் ஒன்று சேர்ந்த சம்பவம் நடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நீண்ட நாட்களாக சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு இடையிலான பிரச்சனை இருந்து வந்தது. ஒருநாள் கோபத்தில் உச்சத்திற்கு சென்ற சரவணன் தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் வீட்டில் சொல்லவே அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் தங்கமயில் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது சக்திவேல், போலீஸில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுக்க சொல்லவே, பாக்கியமும் அதைக் கேட்டு பாண்டியன் குடும்பத்திற்கு சாபம் விட்டு சென்றார்.
26
Pandiyan Stores 2 Serial Latest Twist
அப்போது செந்தில் கூட போலீஸீல் புகார் கொடுக்கலாம் என்று ஐடியாக கொடுக்க பாண்டியன் அதனை மறுத்தார். பிறகு சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து பயந்து நடுங்கிய பாக்கியம் குடும்பத்தினர் பாண்டியன் வீட்டார் மிது வரதட்சணை கேட்டு மிரட்டியதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் மீனாவைத் தவிர மற்ற அனைவரையும் போலீஸார் விசாரணை என்ற அடிப்படையில் ஸ்டெஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
36
Pandiyan Stores 2 Police Station Scene
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த காந்திமதி தனது மருமகள்கள் மற்றும் மகன்களிடம் சொல்லி அழுதுள்ளார். அப்போது வடிவு என்னங்க ஆயிரமிருந்தாலும் என்று ஆரம்பிப்பதற்குள் என்னதான் பகையாக இருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணுங்க ஸ்டேஷனுக்கு போறதை என்னாலும் தாங்கிக் கொள்ள முடியாது. அந்தளவிற்கு நான் ஒன்றும் கல் நெஞ்சுக்காரன் கிடையாது என்று கூறி ஸ்டேஷனுக்கு சென்றார்.
46
Gomathi and Family Unity in Pandiyan Stores 2
அப்பாவை பார்த்த ராஜீ பயத்தில் அவரை கட்டிப்பிடித்து அப்பா பயமாக இருக்கிறது. காப்பாற்றுங்கள் என்று கூறி கதறி அழுதார். இதே போன்று கோமதியும் சக்திவேல் கையை பிடித்துக் கொண்டு அழுதார். பிறகு பழனிவேல் ஸ்டேஷனுக்கு வரவே அவரது மார்பில் சாய்ந்து கொண்ட கோமதி மனம் விட்டு பேசி அழுதார். பாண்டியனும் அவருடனான கோபத்தை மறந்து அவரிடம் பேசினார். இப்படியான நிலையில் மீனாவும் ஸ்டேஷனுக்கு வர, அவர் தான் தங்கமயில் வீட்டிற்கு சென்று பேசியதாக கூறவே, அதனால் தான் தன் மீது புகார் கொடுக்கவில்லை என்றார்.
56
Pandiyan Stores 2 Today Episode
இதைத் தொடர்ந்து மீனாவின் அப்பாவும் ஸ்டேஷனுக்கு வந்தார். அவர் முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆகியோருடன் பேசினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடு முடிந்தது. சீரியல் ஆரம்பித்தது முதல் ஸ்டேஷன் சீனுக்கு முன்பு வரை பாண்டியன் வீட்டாருக்கும், முத்துவேல் வீட்டாருக்கும் பகை இருந்து வந்தது. அதோடு இத்தனை நாட்கள் கூடவே இருந்த பழனிவேல் தனது கடை இருக்கும் அதே தெருவில் கடை திறந்தது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக கூறி பாண்டியன் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டார்.
66
Muthuvel Sakthivel and Meena Father
இப்படியான நிலையில் இப்போது ஒரு பிரச்சனை என்று வரவும் அனைவரும் குடும்பமாக ஒன்று சேர்ந்துவிட்டனர். இனி அரசி மற்றும் குமரவேல் இடையிலான காதல் மலருமா? திருமணம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சரவணன் மற்றும் தங்கமயில் இடையிலான பிரச்சனை முடிவுக்கு வருமா? மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? அல்லது இருவருக்கும் திருமணம் நடக்குமா? பாண்டியனின் முடிவு என்ன என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பார்க்கலாம்.