Moondru Mudichu Serial Surya Try To Save his Wife Nandhini : தனது மனைவி நந்தினி கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று சூர்யா போராடிக் கொண்டிருக்கிறார்.
சூர்யா நந்தினி காதல் காட்சிகள், Surya Nandhini love scenes
Moondru Mudichu Serial Surya Try To Save his Wife Nandhini : நந்தினியை கடத்தி வைக்கப்பட்டு துன்புறுத்தி வருகின்றனர் ரவுடி கும்பல். நந்தினியை காப்பாற்ற துடிக்கும் சூர்யா பரபரப்பான பின்னணியுடன் தாய்குலம் செய்த சூழ்ச்சியும் தெரிய இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. நடந்தது என்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். சன் டிவியில் 8.30 மணி முதல் 9.30 வரை ஒரு மணி நேர ஸ்பெசலாக மூன்று முடிச்சு சீரியல் சுவாரசியமும் பரபரப்புடனும் ஒளிபரப்பாகும். முந்திய எபிசோடில் நந்தினியை ரவுடி கும்பல் கடத்தி கொண்டு போக சூர்யா விடாமுயற்சியுடன் தேடிக் கொண்டிருக்கிறார்.
25
மூன்று முடிச்சு சீரியல் சதித் திட்டம், Moondru Mudichu serial conspiracy
புரோமோவில் சூர்யா நந்தினியை காணவில்லை என்று காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கிறார். என் மனைவி ஒரு கும்பலால் கடத்தப்பட்டு ஒரு லாரிக்குள் வைத்து கடத்தப்பட்ட கடத்தப்பட்டார். மனைவியை கண்டுபிடித்து கொடுங்கள் என்று போலீசாடும் இடம் மனு கொடுத்து வர. போலீஸ் நாங்கள் சீக்கிரம் உங்கள் மனைவியை கண்டுபிடித்து தரும் என்று உறுதி அளித்துள்ளார். பிறகு சூர்யாவும் அருணாச்சலமும் வெளியே வர சுந்தரவல்லி மற்றும் மாதவி இருவரும் வருவதைக் கண்டு எச்சரித்து அமைதியாக இருக்கிறார்கள்.
35
சன் டிவி மூன்று முடிச்சு ப்ரோமோ, Sun TV Moondru Mudichu promo today
அவர்கள் ஒரு காரில் செல்ல சூர்யாவும் அருணாச்சலமும் ஒரு காரில் செல்கின்றனர். யார் கடத்திருப்பாங்கன்னு உங்களுக்கு ஐடியா இருக்கா டாடி என்று தந்தையிடம் சூர்யா கேட்க தெரியலையே சூர்யா என்று குழப்பம் அடைகிறார் அருணாச்சலம். தாய்க்குலம் இந்த வேலையை கண்டிப்பா செஞ்சிருப்பாங்க செய்யக்கூடிய ஆளு தான் என்று தன் அம்மாவே சந்தேகப்படுகிறார் சூர்யா. அதன் பிறகு வீட்டிற்கு சென்ற சுந்தரவல்லி வீட்டிற்குள் சென்றார் மாதவி அம்மா என்னம்மா பண்றது என்று கேட்க நமக்கு என்ன நீ பேசாம இரு என்று கூறிவிட்டு செல்ல ஷார்ப்பிடம் மாதவி நடந்ததை சொல்லி கூறிக் கொண்டிருக்கிறாள்.
45
நந்தினிக்கு வந்த ஆபத்து, Danger for Nandhini in serial
பிறகு சூர்யா வீட்டிற்கு வந்து யார் கடத்துனாங்கன்னு என்னன்னு எனக்கு தெரியும் நான் நந்தினி கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு இருக்கு ஆப்பு என்று அடாவடியாக பேசுகிறார். உங்க அறுபதாம் கல்யாணத்துக்கு கண்டிப்பாக நானும் என் மனைவி க்கு நந்தினியும் கண்டிப்பா வருவோம் அது யாராலும் தடுக்க முடியாது என்று சவால் விடுகிறார். சுந்தரவல்லி அவ வந்தா என்ன வரலைன்னா எனக்கு என்ன என்று அந்த சாமி தான் அதை பாக்கணும் என்று சொல்லிவிடுகிறார்.
55
மூன்று முடிச்சு இன்றைய எபிசோட், Moondru Mudichu today episode
சுந்தரவல்லி ஒரு பேப்பரில் அறுபதாம் திருமணத்திற்கு நந்தினி வருவாள் வரமாட்டார் என்று இரண்டு துண்டு சீட்டில் எழுதுகிறார் அதை சாமி முன்னாடி போட்டு அதை எடுக்க சொல்கிறார். சூர்யா அதை எடுப்பதற்கு யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த பேப்பரை அவர் எடுக்கவில்லை அதில் என்ன எழுதி இருக்கு என்று எனக்குத் தெரியாது ஆனால் கண்டிப்பாக உங்கள் அறுபதாம் திருமணத்திற்கு நான் நந்தினியோடு தான் வருவேன் என்று சுந்தரவல்லியிடம் சவால் விட்டு சொல்கிறார் சூர்யா. சுந்தரவல்லி கோபத்துடன் சூர்யாவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்தது.