
கயல் மற்றும் மருமகள் இருவரும் இணையும் மகா சங்கமும் எதிர்பார்க்காத பின்னணியும் சுவாரசியமும் கலந்த ஒளிபரப்பாகி வருகிறது இரு குடும்பங்களிலும் நடக்கும் சூழ்ச்சியை செய்யும் தர்மலிங்கம் மற்றும் சத்தியா அதிரடி பின்னணியை இன்றைய ப்ரோமோவை வைத்து பார்க்கலாம். சன் டிவியில் இரவு 7:30 மணி முதல் 8.30மணி வரை ஒரு மணி நேரம் ஸ்பெஷல் ஷோவாக ஒளிபரப்பாகும் கயல் மற்றும் மருமகள் மகா சங்கமம் சுவாரசியமும் அதிரடி காட்சியாகவும் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
மீனாட்சியின் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தரும் கயல் குடும்பத்தினர் மிக எதிர்பார்ப்புடன் வந்து கொண்டிருக்கின்றனர் ஆனந்திக்கும் கௌசிக்கும் நிச்சயதார்த்தம் நடத்த மீனாட்சி முடிவு செய்துள்ளார் அதனை கணவரிடம் கூற அவரும் ஒப்புக்கொண்டார் இதனை ஒரு ஹோட்டலில் வைத்து நடைபெற உள்ளது இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே பெரிய தர்மலிங்கமும் வடிவம் அந்த இடத்திற்கு வருகின்றனர் அவர்களை வரவேர்த்த பிறகு கௌஷிக் ஆனந்தி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்துள்ளேன் என்று தர்மலிங்கம் கூற அவர்களும் சரி என்று ஒப்புக்கொண்டனர்.
இதற்கு மீனாட்சி எனக்கு மிகவும் சந்தோசம் அண்ணா என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். வடிவு என்னங்க சரின்னு ஒத்துக்கிட்டீங்க இதுக்கு காமாட்சி கயல் சம்மதிக்க வேண்டாமா என்று சொல்ல. ஏன் சம்மதிக்க மாட்டாங்க கண்டிப்பா சமாதிப்பாங்க நான் சொன்னா கயல் கண்டிப்பா கேட்பாய் என்று உறுதியாக மீனாட்சி இடம் கூறுகிறார் தர்மலிங்கம். இந்த கல்யாண பொரப்பையே நான் உங்ககிட்ட கொடுக்கிறேன் நீங்க எந்த நேரத்துல எப்படி பக்குவமா சொல்றீங்களோ சொல்லி இந்த சம்மதம் வாங்கணும் இது இனிமேல் இது உங்க பொறுப்பு என்று மீனாட்சி பொறுப்பை தர்மலிங்கம் கொடுக்க நான் என்ன சொன்னாலும் கயல் கேட்பால் அது என்னுடைய குடும்பம் என்று உறுதியாக கூறுகிறார் தர்மலிங்கம்.
இது ஒரு புறம் நடக்க மறுபுறம் மருமகள் குடும்பத்தினர் ரோகினிக்கு பரிகார பூஜை செய்வதற்காக இங்கு வருகின்றனர். அதே ஹோட்டலுக்குள் என்ட்ரி ஆகிறார் பிரபு மற்றும் அதிரை இருவரும் பேசிக்கொண்டே வருகின்றனர் இனிமேல் நம்ம இங்கு ஃப்ரீயா தங்க போறோம் ஏனென்றால் எனக்கு ஒரு கூப்பன் கிடைத்துள்ளது. அதில் ஒரு குடும்பத்திற்கு இலவசமாக சாப்பாடு தங்கும் வசதி இங்கு இருக்கிறது என்று கூறிக் கொண்டே வருகிறார் பிரபு. இங்கு தங்கி சாப்பிட்டுவிட்டு அருகில் இருக்கும் கல்யாணி அம்மன் கோயிலுக்கு சென்று பரிகார பூஜையை செய்யனும் இதுக்கெல்லாம் என்ன காரணம் நினைக்கிற அய்யாவோட பிரைன் தான் என்று ஆதிரையிடம் புகழ்ந்து கொண்டே வருகிறார் பிரபு.
இந்த ஹோட்டல் உடைய லக்கி குப்பன் எனக்கு தான் கிடைச்சிருக்கு நான் எவ்வளவு பணம் மிச்சம் புடிச்சிருக்கேன் என்றும் புகழ்ந்து கொண்டுள்ளார். எல்லாரும் உங்களை சொல்ற மாதிரி நீங்க ஒரு கஞ்ச பிரபு தானே ஆதிரை கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார். கௌதமும் ரோகினியும் திருமணம் செய்து கொள்ள சத்யாவுடன் பிரபுவுக்கு ஆதிரைக்கும் தெரியாமல் திட்டமிட்டுள்ளனர். சத்யா செய்யும் சூழ்ச்சியால் ரோகினி மிகவும் தைரியமாக இருந்து வருகிறார். ரோகினியை ஆதிரை தேட ரோகினி கௌதம் உடன் போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யாருகிட்ட பேசிகிட்டு இருக்க என்று கேட்க லீவு சொல்லனும்ல நீ அதனால நான் பேசிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லி அனுப்புகிறாள் அதன் பிறகு பிரபு ஹோட்டலுக்குள் நுழைய கயல் குடும்பத்தினர் வந்து பிரபு மற்றும் மாதிரி இடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு அந்தக் கூப்பனில் திருமணம் ஆன ஒரு ஜோடி மற்றும் இரு குழந்தைகளுக்கு மட்டும்தான் அலோட் என்று குறிப்பிட்டுள்ளது நீங்கள் என் உங்க குடும்பத்தையே கூட்டிட்டு வந்து இருக்கீங்க இவங்களுக்கெல்லாம் தனி அமௌன்ட் பே பண்ணனும் இன்றி வாக்குவாதம் இடுகிற ஹோட்டல் உரிமையாளர் அதற்கு பிரபு சரமாரியாக கேள்விகளை எழுப்பி அவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.
பிறகு கயல் குடும்பம் வந்து அதனை பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றனர். பிரபு கோயிலுக்கு பரிகார பூஜை செல்வதற்கு தயாராக இருந்து வருகிறார் தங்கள் ரோகிணியிடம் ஒரு பட்டுப் புடவையை கொடுத்து இதனை கட்டிக் கொண்டு வா என்று சொல்லி அனுப்ப ரோகிணியும் புடவையைக் கட்டி வந்து தன் அப்பா மற்றும் அண்ணன் அனைவரும் முன்னாடியும் நின்று காட்டுகிறார் அவருக்கு தெரியாது ரோகிணி திருமணம் செய்யப் போகிறார் என்று ரோகினி நட்பா நீ கல்யாண பொண்ணு மாதிரியே இருக்க ரோகிணி என்று சொல்ல சத்தியா மனதிற்குள் அவர் உண்மையாவே கல்யாணம்தான் பண்ண போற அது உங்களுக்கு தான் தெரியாது என்று வன்மமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் கௌதம் அவர்கள் நண்பர்களுடன் ரிஜிஸ்டர் ஆபீசில் கல்யாணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தகுந்த நேரத்தை சத்தியா செய்து கொண்டிருக்கிறார் ரோகினியும் தயாராக இருக்கின்றார்.இந்த புரோமோவில் இத்துடன் முடிவடைந்தது.