யாரோட சொத்த யார் ஆட்டைய போடுறது: ஓ நீ தான் அந்த அர டிக்கெட்டா? அப்பத்தா எண்ட்ரியால் அனல்பறக்கும் எதிர்நீச்சல்!

Published : Dec 14, 2025, 05:19 PM IST

Ethirneechal Thodargiradhu Today 351st Episode Promo Video : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய 351ஆவது எபிசோடு தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

PREV
17
சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சுயமாக பிஸினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக ஜனனி ஆரம்பித்த தொழில் தான் தமிழ் சோறு. ஆனால், இதற்கு ஆப்பு வைக்க குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி பிளான் போட அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடுகிறார் தர்ஷினி. இந்த நிலையில் தான் இன்றைய 351ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோ வீடியோவை சன் டிவி வெளியிட்டது. அதில், என்ன நடக்கிறது என்பது பற்றி பார்த்து தெரிந்து கொள்வோம்.

27
Ethirneechal Thodargiradhu Today 351st Episode Promo Video

குணசேகரனின் சூழ்ச்சியால் அனைத்து சொத்துக்களும் குணசேகரன் பெயரில் இருப்பதால் வீட்டில் உள்ள மருமகள் அனைவரும் என் சொத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று போலீஸாரிடம் கம்ப்ளைன்ட் செய்து போலீசை மற்றும் அவரது வக்கீலையும் வீட்டுக்கு வர வைக்கின்றனர். அறிவுக்கரசியும் அதற்கு சப்போர்ட்டாக இருக்கிறார். ரேணுகா, சக்தி, ஜனனி என்று அனைவரையும் வெளியேற்ற போலீசார் மற்றும் குணசேகரன் வக்கீல் ஆகியோர் வந்து ஜனனியை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அவர்களுடன் சண்டை இட்டு அவர்களை வெளியேற்றுகின்றனர்.

37
அப்பத்தா ரீ என்ட்ரி: Sun TV Ethir Neechal Latest Update, Serial Plot Twist

அப்பத்தா என்னும் கேரக்டில் உள்ள பட்டமா நீண்ட நாட்கள் பிறகு ரி என்ட்ரி கொடுக்கிறார். அவர் காரில் வீட்டிற்குள் வருகிறார். அந்த நேரம் பார்த்து ஜனனி, ரேணுகா, நந்தினியை வீட்டைவிட்டு துரத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் ஆதி குணசேகரனின் வழக்கறிஞரும் இருக்கிறார்.

அப்போது காரில் வந்து இறங்கிய பட்டம்மா வாட்ச் கோயிங் ஆன் இங்கு என்ன நடக்கிறது எதற்கு இவர்களை வெளியே அனுப்புறீங்க என்று போலீசாரிடம் கேட்க, அதற்கு போலீசார் தனது சொத்துக்களை மருமகள் அனைவரும் ஏமாத்தி அனுபவித்து வருகிறார்கள் என்று குணசேகரன் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார். இதன் அடிப்படையில் நாங்கள் இவர்களை வெளியே அனுப்புகிறோம் என்று கூறுகின்றனர்.

47
Gunaselan Family Drama, Today's Episode

அப்போது அறிவுக்கரசி நீ யார் இந்த பிரச்சனை எல்லாம் கேட்க என்ற கேள்வி எழுப்ப அப்பத்தா இது யார் என்று ரேணுகாவிடம் கேட்கிறார் அதற்கு ரேணுகா இவர்தான் அறிவுக்கரசி கூறுகிறார்.வ்"ஓ நீ தான் அந்த அர டிக்கெட்டா? ஏய் சில்ற ஓரமா நில்லு நான் அப்புறமா வரேன் உனக்கு என்று கூறிவிட்டு பேச ஆரம்பிக்கிறார்.

நீங்கதான் எல்லா சொத்தையும் உங்க பேரனுக்கு எழுதி கொடுத்துட்டீங்களே அப்புறம் எப்படி உங்க பேர்ல இருக்கு என்று கேட்கிறார் அறிவுக்கரசி" ஆமா என் பேரனுக்கு தான் எல்லா சொத்தையும் எழுதி வைத்தேன். ஆனா அவர் எப்படி அவங்க தம்பிக்கு எழுதிக் கொடுத்த சொத்து இப்ப அவர் பேர்ல இருக்கோ அதே மாதிரி எனக்கு வந்துருச்சு என்று அறிவுக்கரசியின் மூக்கு உடையும்படி கூறுகிறார் அப்பத்தா.

57
Ara Ticket Dialogue, Ethir Neechal Aadhi Shock

இன்ஸ்பெக்டர் இந்த சொத்தெல்லாம் என் பேருல இருக்கு என்று அதிரடியான டுவிஸ்ட் கொடுக்கிறார். சக்தியை கூப்பிட்டு காரில் உள்ள ஃபைலை எடுத்து வா என்று கூற, அவரும் எடுத்து வந்து கொடுக்க அதனை போலீசாரிடம் கொடுக்கிறார். இதை நன்றாக படித்து பாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு தெரியும் என்று வீட்டுக்குள் வாங்கள் என்று கூப்பிட்டு உட்கார வைக்கிறார். பிறகு அனைவரும் வீட்டுக்குள் செல்கின்றனர்.

67
Appatha Smashes Aadhi, Who is Stealing Property

குணசேகரிடம் சொல்லும் அறிவுக்கரசி:

இவர்கள் வீட்டுக்குள் சென்ற பிறகு குணசேகருக்கு போன் மூலம் அறிவுக்கரசி தெரிவிக்கிறார் அப்பத்தா வீட்டுக்கு வந்து இருக்கு என்று கூறவே குணசேகரனுக்கு ஒரே அதிர்ச்சி. அவரால் தாங்கிக் கொள்ளமுடியவிலை. இதையடுத்து, அவரது தம்பிகளுக்கும் அதிர்ச்சி. இந்த கிழவி எங்கிருந்து எப்படி வந்தது என்று கேட்கின்றனர்.

77
Ethir Neechal Appatha Twist, Appatha Property Fight

டாக்குமெண்டை படித்துவிட்டு குணசேகரனின் நிறைய குழப்பம் இருக்கு இதை நாங்க எப்படி உங்க சொத்துன்னு ஒப்புக்கொள்ள முடியும் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அப்பத்தான் இந்த நிறைய குழப்பம் இருக்கும்போது இவர்களை எப்படி நீங்க வீட்டை விட்டு வெளியேர்றுவீர்கள் என்று கேட்கிறார். அத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது இதற்குப் பிறகு என்ன நடக்கின்றது என்பதை இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories